தினகரன்: திமுகவை வீழ்த்த வேண்டுமெனில் தொண்டர்கள் ஓரணியாகத் திரள வேண்டும்

தினகரன்: திமுகவை வீழ்த்த வேண்டுமெனில் தொண்டர்கள் ஓரணியாகத் திரள வேண்டும்

1 mins read

தஞ்­சா­வூர்: அ.ம.மு.க. பொதுச்­செ­ய­லா­ளர் டி.டி.வி.தின­க­ரன் நேற்று தனது 60வது பிறந்­த­நாளை தஞ்­சை­யில் நிர்­வா­கி­கள், தொண்­டர்­க­ளோடு இணைந்து கேக் வெட்டி கொண்­டா­டி­னார். பின்­னர் அவர் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார். அப்போது அவர், ஜெய­ல­லி­தா­வின் உண்­மை­யான தொண்­டர்­கள் ஓர­ணி­யில் திரளவேண்டும். அப்போதுதான் வரும் நாடாளுமன்றத் தேர்தலில் திமுவை வீழ்த்த முடியும்.

எடப்­பாடி பழ­னி­சாமி, ஜெய­ல­லி­தா­வின் உண்­மை­யான தொண்­டர் இல்லை என்­பதை பல இடங்­களில் மெய்ப்பித்து வரு­கி­றார். உத­ய­நிதி ஸ்டா­லினை அமைச்­ச­ராக்­கு­வ­தில் தவ­றில்லை. ஆனால் ஏன் இவ்­வ­ளவு அவ­ச­ரத்­தில் அமைச்­ச­ராக்க மு.க.ஸ்டா­லின் நினைக்­கி­றார் என தெரி­ய­வில்லை.

புதுச்­சே­ரி­யில் தி.மு.க. ஆட்சி அமைய வாய்ப்பு இல்லை என்­பது எனது கருத்து. தி.மு.க. தேர்­த­லில் கொடுத்த பல வாக்­கு­று­தி­களை நிறை­வேற்­ற­வில்லை. அதற்­கான பதில் வரு­கிற நாடாளு­மன்ற தேர்­த­லில் கிடைக்­கும். இவ்­வாறு அவர் கூறி­னார்.