சட்டம் பயின்று வழக்கறிஞர் ஆகியுள்ள முதல் திருநங்கை

சட்டம் பயின்று வழக்கறிஞர் ஆகியுள்ள முதல் திருநங்கை

1 mins read

சென்னை: செங்கல்பட்டு மாவட்டம், புதுப்பாக்கம் அரசு சட்டக் கல்லூரியில் ஐந்தாண்டு சட்டப்படிப்பை பயின்றுள்ள முதல் திருநங்கையான கண்மணிக்கு வழக்கறிஞர் பதிவுச் சான்றிதழை தமிழ்நாடு, புதுச்சேரி வழக்கறிஞர் மன்றத் தலைவர் பி.எஸ்.அமல்ராஜ் நேற்று வழங்கினார்.

பின்­னர் செய்­தி­யா­ளர்­க­ளி­டம் அமல்­ராஜ் கூறி­ய­போது, "ஆண்டு­தோ­றும் சட்­டப்­ப­டிப்பை முடித்து வழக்­க­றி­ஞர்­க­ளாகப் பதிவு செய்து கொள்ளும் வழக்­க­றி­ஞர்­க­ளின் எண்­ணிக்கை அதி­க­ரித்து வரு­வது மகிழ்ச்சி அளிக்­கிறது. இந்த எண்ணிக்கையைப் பார்க்கும்போது ஆண் வழக்­க­றி­ஞர்­க­ளுக்கு நிக­ராக பெண்­ வ­ழக்­க­றி­ஞர்­க­ளின் எண்­ணிக்­கை­யும் உயர்ந்­துள்­ளது.

"திரு­நங்கை மாண­வி­யான கண்­மணி தன் கடின உழைப்பு, விடாமுயற்­சி­யால் சமூ­கத்­தில் வழக்­க­றி­ஞ­ராக உயர்ந்­துள்­ளார்," என்று கூறி­னார்.

கண்­மணி கூறும்­போது, ''பாலின மாறு­பாடு கார­ண­மாக கடந்த 2017ல் என் கு­டும்­பத்தை விட்டுப் பிரிந்து, விடு­தி­யில் தங்கி சட்­டப்­ப­டிப்பை முடித்­தேன். குடும்­பத்­தி­னர் என்னை ஏற்றுக்கொள்ளா விடிலும் சக மாண­வர்­கள், பேரா­சி­ரி­யர்­கள், கல்­லூ­ரி ­முதல்­வர் என்னை ஏற்றுக்கொண்டு கடந்த ஐந்தாண்­டு­க­ளாக எனக்கு ஊக்­க­மும் உற்­சா­க­மும் அளித்­த­னர்.

"தற்­போது என் குடும்பத்தினர் என்னை நேசிக்கின்றனர். திரு­நங்கை வழக்­க­றி­ஞர் என்­ப­தில் எனக்­கும் பெரு­மை­தான். இத்­துடன் நின்று­வி­டா­மல், சிவில் நீதி­ப­தி­களுக்­கான தேர்வெழுதி அதி­லும் வெற்றிபெறுவதுதான் என் லட்­சி­யம்,'' எனக் கூறியுள்ளார்.