சென்னை: தமிழக அமைச்சரவையில் உதயநிதி ஸ்டாலின் 35வது அமைச்சராக புதிய பொறுப்பேற்றுக்கொண்டுள்ள நிலையில், ஏற்கெனவே இருந்த 10 அமைச்சர்களின் துறைகள் மாற்றம் செய்யப்பட்டு அறிவிக்கப்பட்டுள்ளன.
அவை பின்வருமாறு:
கூட்டுறவுத்துறை அமைச்சராக இருந்த ஐ.பெரியசாமிக்கு ஊரக வளர்ச்சித் துறை ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
ஊரக வளர்ச்சித் துறை அமைச்சராக இருந்த பெரிய கருப்ப னுக்கு கூட்டுறவுத்துறை ஒதுக்கீடு.
வனத்துறை அமைச்சராக இருந்த ராமச்சந்திரனுக்கு சுற்று லாத் துறை ஒதுக்கீடு.
சுற்றுலாத்துறை அமைச்சராக இருந்த மதிவேந்தனுக்கு வனத்துறை ஒதுக்கீடு.
பிற்படுத்தப்பட்டோர் நலத் துறை அமைச்சராக இருக்கும் ராஜகண்ணப்பனுக்கு கதர், கிராமத் தொழில் வாரியத் துறைகள் ஒதுக்கீடு.
ஜவுளி, கைத்தறித் துறை அமைச்சர் காந்தி வசம் உள்ளது.
சி.வி.மெய்யநாதனுக்கு சுற்றுச் சூழல் துறை, மாசுக்கட்டுப்பாடு துறை ஒதுக்கீடு.
இந்துசமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு அதே துறையைக் கவனிப்பார். கூடுதலாக சென்னை பெருநகர வளர்ச்சிக் குழுமத்தையும் கவனிப்பார்.
வீட்டு வசதி, நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சர் முத்து சாமி அதே துறையைக் கவனிப்பார்.
நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜனுக்கு அமைச்சர் ஐ.பெரியசாமி வசமிருந்த புள்ளியியல் துறை கூடுதலாக ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

