கேரளாவில் மீண்டும் பறவைக் காய்ச்சல் பாதிப்பு; 8,000 கோழி, வாத்துகள் அழிப்பு தமிழகக் கோழிப்பண்ணைகளில் பாதுகாப்பு நடவடிக்கை தீவிரம்

கேரளாவில் மீண்டும் பறவைக் காய்ச்சல் பாதிப்பு; 8,000 கோழி, வாத்துகள் அழிப்பு தமிழகக் கோழிப்பண்ணைகளில் பாதுகாப்பு நடவடிக்கை தீவிரம்

2 mins read
fff728f9-b505-4fbe-b8d1-e7e71fad095c
-

நாமக்­கல்: கேரள மாநி­லத்­தில் பற­வைக் காய்ச்­சல் பாதிப்பு மீண்­டும் தலை­தூக்கி உள்­ளது. இந்­தப் பாதிப்­பால் 8,000 கோழி, வாத்து போன்ற பற­வை­யி­னங்­கள் அழிக் கப்­பட்டு உள்­ள­தாக தக­வல்­கள் தெரிவித்துள்ளன.

இந்­தப் பாதிப்­பின் எதி­ரொ­லி­யாக தமிழ்­நாட்­டில் உள்ள அனைத்து கோழிப் பண்­ணை­க­ளி­லும் நோய்த் தடுப்பு முன்­னெச்­ச­ரிக்கை நடவடிக்­கை­கள் தீவி­ரப்­ப­டுத்­தப்பட்­டுள்­ளன.

அண்­மை­யில் கேரள மாநி­லம், கோட்­ட­யம் மாவட்­டத்­தில் உள்ள ஆர்ப்­புக்­கரை, தல­யா­ழம் பகு­தி­யில் உள்ள பண்­ணை­களில் இருந்த வாத்­து­, பறவைகள் திடீ­ரென செத்து மடிந்­தன.

இதை­ய­டுத்து, கால்­ந­டைத் துறை­யி­ன­ரும் சுகா­தா­ரத் துறை யின­ரும் இந்­தப் பண்­ணை­களில் ஆய்வு நடத்­தி­ய­போது, பற­வைக் காய்ச்­சல் பாதிப்பு இருப்­பது உறு­தி­யா­னது.

இதை­ய­டுத்து பற­வைக்காய்ச்­சல் பாதிப்­புக்­குள்­ளான வாத்து, கோழி­களை அழிக்கும்படி மாவட்ட நிர்­வா­கம் உத்­த­ர­விட்­ட நிலையில், கோட்­ட­யம் மாவட்­டத்­தில் 8,000 வாத்து, கோழி­கள் அழிக்­கப்­பட்­டன.

அத்­து­டன், இப்பண்ணைகளில் இருந்து பறவை இறைச்சி, முட்­டை­கள் விற்­க­வும் தடை விதிக்­கப்­பட்­டுள்­ளது.

கிறிஸ்­மஸ், புத்­தாண்டு விழாக்­கள் அடுத்தடுத்து வரவுள்ள நிலை­யில் பற­வை­கள் அழிக்கப்பட்டது பண்­ணை­யா­ளர்­களைக் கவ­லை­யில் ஆழ்த்­தி­யுள்­ளது.

இத­னி­டையே, தமி­ழகக் கோழிப் பண்­ணை­க­ளி­லும் நோய்த் தடுப்பு நட­வ­டிக்­கை­கள் தீவி­ரப்­ப­டுத்­தப் பட்­டுள்­ளன.

பண்­ணை­களில் கிரு­மி­நா­சினி மருந்­து­கள் தெளிக்­கப்­ப­டு­வ­து­டன், பண்­ணை­க­ளுக்கு வந்து செல்­லும் வாக­னங்­க­ளுக்­கும் கிரு­மி­நா­சினி மருந்து தெளித்த பின்­னரே அனு­மதிக்கப்படுகிறது.

நாமக்­கல் மாவட்­டத்­தில் மட்­டும் ஆயி­ரத்­திற்­கும் மேற்­பட்ட கோழிப் பண்­ணை­கள் உள்­ளன. இங்கு தின­மும் 5 முதல் 6 கோடி முட்­டை­கள் உற்­பத்தி செய்­யப்­ப­டு­கின்­றன. இங்­கி­ருந்து வெளி­நா­டு­க­ளுக்­கும் வெளிமாநி­லங்­க­ளுக்­கும் முட்டை கள் ஏற்­று­மதி செய்­யப்­ப­டு­கின்­றன.

நாமக்­கல் பண்­ணை­களில் இருந்து ஒரு கோடி அள­வி­லான முட்­டை­களும் இறைச்­சிக் கோழி­களும் கேரளாவிற்கு அனுப்­பப்­ப­டு­வது வழக்­கம். ஆனால், இப்­போ­தைய சூழ­லில் அங்கு பறவை காய்ச்­சல் பீதி நிலவுவதால் முட்டை, கோழி இறைச்சி விற்­பனை சரி­வ­டை­யும் அபா­யம் ஏற்­பட்­டுள்­ளது.