நத்தைகள் படையெடுப்பால் வனதுர்க்கை மக்கள் அவதி

நத்தைகள் படையெடுப்பால் வனதுர்க்கை மக்கள் அவதி

1 mins read

திரு­வண்­ணா­மலை: திரு­வண்ணா மலை அருகே கன­மழை காரண மாக குடி­யி­ருப்­புப் பகு­தி­க­ளுக்­குள் வெள்­ள­நீர் தேங்­கு­வ­து­டன் பெரிய பெரிய நத்­தை­கள் வீட்­டுக்­குள் படை­யெ­டுப்­ப­தால் அங்கு வசிக்­கும் மக்­கள் கடும் அவ­திக்­குள்­ளாகி வரு­கின்­ற­னர்.

நல்­ல­வன்­பா­ளை­யம் ஊராட்­சிக்கு உட்­பட்ட வன­துர்க்கை அம்­மன் நக­ரில் 200 குடும்­பத்­தினர் வசிக்­கின்­ற­னர்.

அண்­மை­யில் பெய்த தொடர் மழை­யால் சில இடங்­களில் வெள்­ள­நீ­ரு­டன் கழி­வு­நீ­ரும் கலந்து வீடு­க­ளுக்­குள் புகுந்­துள்­ள­தால் துர்­நாற்­றம் வீசு­கிறது.

இந்­நி­லை­யில், வனதுர்க்கை அம்­மன் நக­ரில் உள்ள வீடு, செடி, கொடி, மரம் என எங்கு பார்த்­தா­லும் கூட்­டம் கூட்­ட­மாக நத்­தை­கள் நகர்ந்­து­கொண்டே இருப்­பது அப்­ப­கு­தி­யி­ன­ரி­டையே கலக்­கத்தை ஏற்­ப­டுத்­தி­யுள்­ளது.

நத்­தை­கள் வீட்­டுக்­குள்­ வந்து­வி­டு­கிறது. மரத்­தி­லும் தொங்­கு கிறது. இரவு நேரங்­களில் நத்­தை­கள் மட்­டு­மன்றி பூரான், தேள் போன்ற ­பூச்­சி­கள் நச்­சுப் பாம்­புகளும் வரு­வ­தாக அங்­குள்ள மக்­கள் அச்­சப்படு­கின்­ற­னர்.

நத்­தை­களை அகற்­று­வ­து­டன் முறை­யான சாலை­கள், கால்­வாய் வச­தி­களை ஏற்­ப­டுத்­த­வேண்­டும் என தமி­ழக அர­சுக்கு அவர்­கள் கோரிக்கை விடுத்­துள்­ள­னர்.