சென்னை: தமிழ்நாட்டில் முதல் முறையாக வில்லிவாக்கம் ஏரியில் மக்கள் உற்சாகமாக நடந்து செல்லும் வகையில் பிரம்மாண்டமான கண்ணாடிப் பாலம் அமைக்கப்பட்டு உள்ளது.
சிங்கப்பூரில் உள்ள பாலத்தை முன்மாதிரியாகக் கொண்டு பொதுமக்கள், சுற்றுலாப் பயணிகளைக் கவரும் வகையில் இப்பாலம் அமைக்கப்பட்டுள்ளது.
விரைவில் இப்பாலத்தை மக்களின் பயன்பாட்டுக்கு கொண்டு வரவும் நடவடிக்கைகள் எடுக்கப் பட்டு வருகின்றன.
250 மீட்டர் நீளம், ஒரு மீட்டர் அகலத்தில் இப்பாலம் ரூ.8 கோடி செலவில் அமைக்கப்பட்டு உள்ளது.
ஒரேசமயத்தில் பாலத்தின் மீது ஏரியின் அழகை ரசித்தபடி 250 பேர் நடந்து செல்லலாம் என்றும் தகவல்கள் குறிப்பிட்டுள்ளன.
இந்தப் பாலத்தின் மீது நடந்து செல்லும்போது தண்ணீர் மீது நடந்து செல்வது போன்ற உணர் வையும் ஏற்படுத்தும்.
இப்பாலத்தில் பொதுமக்கள் எளிதாக ஏறிச்செல்லும் வகையில் படிக்கட்டுகளும் மின்தூக்கி வசதிகளும் அமைக்கப்பட்டு உள்ளன.
தற்போது இதன் இறுதிக் கட்டப் பணிகள் மும்முரமாக நடந்து வருகின்றன.
39 ஏக்கர் பரப்பளவு கொண்ட இந்த ஏரியை மறு சீரமைப்பு செய்து பொழுதுபோக்கு பூங்காவாக மாற்றும் பணியைச் சென்னை மாநகராட்சி செய்து வருகிறது.
'ஸ்மார்ட் சிட்டி' திட்டத்தின் கீழ் ரூ.37 கோடி செலவில் இந்தப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
இந்த ஏரியைச் சுற்றிலும் படகுச் சவாரி, பூங்கா, சிறுவர்கள் விளையாடுவதற்கான ராட்டினம், குட்டி ரயில்கள், நீர் விளையாட்டு, இசை நீரூற்று, 12-D திரையரங்குகள், ஏராளமான கடைகள், உண வகங்கள், விளையாடும் இடம், வாகன நிறுத்துமிடம், கண்கவர் விளக்குகள், ஏரியைச் சுற்றி பல கிலோ மீட்டர் தூர நடைபாதை என அனைத்து வசதிகளும் இங்கு அமைக்கப்பட்டு வருகின்றன.

