ஈரோட்டில் கிராமங்களுக்கு வரும் தகன மேடை

ஈரோட்டில் கிராமங்களுக்கு வரும் தகன மேடை

1 mins read
57bfa2e8-26b9-4ac7-9d76-b85850075aaa
-

ஈரோடு: கிரா­மங்­களில் இறந்­த­வர்­களின் உடல்­க­ளைத் தக­னம் செய்ய நட­மா­டும் தகன மேடை அறி­மு­கம் செய்­யப்­பட்­டுள்­ளது.

தமி­ழ­கத்­தில் முதல்­மு­றை­யாக ஈரோடு பகு­தி­யில் இந்த நட­மா­டும் மயான சேவைத் திட்­டம் அறி­முகப்­ ப­டுத்­தப்­பட்­டுள்­ளது.

ஈரோடு மாந­க­ராட்சியும் ரோட்­டரி ஆத்மா அறக்­கட்­ட­ளை­யும் இணைந்து 14 ஆண்­டு­க­ளாக நடத்­தும் மின் மயா­னத்­தில் நக­ரப் பகு­தி­களில் உயி­ரி­ழப்­ப­வர்­க­ளின் உடல்­கள் எரி­யூட்­டப்­ப­டு­கின்­றன.

இந்­நி­லை­யில் கிராம மக்­க­ளுக்­குச் சேவை அளிக்­கும் விதத்­தில் நட­மா­டும் எரி­யூட்­டும் வாக­னத்தை அந்த அமைப்பு தயார் செய்து கொண்டு வந்­துள்­ளது.

இதற்­காக, கேரள மாநிலம் திருச்­சூ­ரில் 25 லட்­சம் ரூபாய் செல­வில் தகன மேடை வாக­னம் பிரத்­தி­யே­க­மாக வடி­வ­மைக்­கப்­பட்டு, வாங்­கப்­பட்­டுள்­ளது.

இந்த தகன மேடை மூலம் வீடு களுக்கே சென்று, இறந்­த­வர்­களின் உடல்­க­ளைப் பெற்று அடக்­கம் செய்ய முன்­வந்­துள்­ளது.

அதற்­கான கட்­ட­ணம் ரூ.7,000 என்­றும் ஒருமணி நேரத்­தில் இறந்த­ வ­ரின் உடல் எரி­யூட்­டப்­பட்டு, குடும்­பத்­தி­ன­ரி­டம் அஸ்தி வழங்­கப்படும் என்­றும் தெரிவிக்­கப்­பட்டு உள்­ளது. கிரா­மப்­பு­றங்­களில் ஒதுக்­கப்­படும் இடங்­க­ளுக்குத் தகன மேடை கொண்டு செல்­லப்­படும் என்­றும் இத­னால் எரி­யூட்­டும் செலவு பாதி­யா­கக் குறை­வ­து­டன் நேர­மும் மிச்­ச­மா­கும் என்­றும் தொண்டு நிறுவனத்தினர் கூறியுள்ளனர்.