அதிமுக வழக்கு ஒத்திவைப்பு

அதிமுக வழக்கு ஒத்திவைப்பு

1 mins read

சென்னை: அதி­முக பொதுக்­குழு விவ­கா­ரத்­தின் மேல்­மு­றை­யீட்டு மனுக்­கள் மீதான விசா­ர­ணை ஜன­வரி 4ஆம் தேதிக்கு உச்ச நீதி­மன்­றம் ஒத்­தி­வைத்­துள்­ளது. அதி­முக பொதுக்­குழு விவ­கா­ரம் தொடர்­பாக எடப்­பாடி பழ­னி­சா­மி­, ஓ.பன்­னீர்­செல்­வம் தரப்பினர் உச்ச நீதி­மன்­றத்­தில் மேல்­மு­றை­யீட்டு மனுக்­கள் தாக்­கல் செய்­துள்­ள­னர். இந்த வழக்­கு­களை உச்­ச ­நீ­தி­மன்ற நீதி­பதி தினேஷ் மகேஸ்­வரி அடங்­கிய அமர்வு விசாரிக்கிறது. நேற்று விசா­ர­ணைக்கு பட்­டி­ய­லி­டப்­பட்­டி­ருந்­த நிலையில் நேர­மின்மை கார­ண­மாக வழக்கை மறு­நாள் தள்ளி ­வைக்­க­லாமா என்று நீதி­ப­தி­கள் கேட்­ட­னர். அப்­போது ஈ.பி.எஸ். தரப்­பி­னர் கிறிஸ்­­மஸ் விடு­மு­றைக்­குப் பின் தள்­ளி­வைக்க கோரிக்கை விடுத்தனர். இதையடுத்து வழக்கு விசா­ர­ணையை ஜன­வரி 4ஆம் தேதி பிற்­ப­கல் 2 மணிக்கு நீதிபதிகள் ஒத்திவைத்தனர்.