காந்தி சிலை இடமாற்றத்திற்கு அனுமதி

காந்தி சிலை இடமாற்றத்திற்கு அனுமதி

1 mins read
1405833a-7704-41ce-9242-b9c3b0b94bcb
-

சென்னை: சென்­னை­யின் முக்­கிய அடை­யா­ள­மாக இருக்­கும் மெரினா கடற்­கரை காந்தி சிலை வேறு இடத்­திற்கு மாற்ற தமி­ழக அரசு அனு­ம­தி­ய­ளித்­துள்­ளது.

இத­னால் மெட்ரோ ரயில் திட்­டத்­தின் 2ஆம் கட்­டப் பணி­க­ளுக்­காக சென்னை மெரினா கடற்­க­ரை­யில் அமைந்­துள்ள மகாத்மா காந்தி சிலை 15 மீட்­டர் தொலை­வில் இட­மாற்­றம் செய்­யப்­படும்.

சென்னை மெட்ரோ ரெயில் திட்­டத்­தின் 2ஆம் கட்ட பணி­க­ளுக்­காக காந்தி சிலையை இட­மாற்­றம் செய்ய வேண்­டிய அவ­சி­யம் ஏற்­பட்­டது. இதை­ய­டுத்து தமி­ழக அர­சி­டம் மெட்ரோ ரயில் நிர்­வா­கம் அனு­மதி கேட்­டி­ருந்த நிலை­யில் நேற்று அரசு ஒப்­பு­தல் அளித்­தது.

இந்த மாத இறு­திக்­குள் காந்தி சிலையை இட­மாற்­றம் செய்ய மெட்ரோ நிர்­வா­கம் முடிவு செய்­துள்­ளது. தற்­போது காந்தி சிலை அமைந்­தி­ருக்­கும் பகு­தி­யில்­தான், இரண்­டாம் கட்ட மெட்ரோ ரயில் திட்­டத்­தின் 90 விழுக்­காடு பணி­கள் நடை­பெற்று வரு­கிறது.

இந்­தப் பணி­கள் நிறை­வ­டைந்­த­தும் காந்தி சிலை மீண்­டும் பழைய இடத்­தில் வைக்­கப்­படும்.

அது வரை காந்தி சிலையை மக்­கள் பார்­வை­யி­டவோ, மாலை அணி­வித்து மரி­யாதை செலுத்­து­வோ முடி­யாது. மெட்ரோ ரயில் திட்டப் பணிகளுக்காக ராட்சத இயந்திரங்கள் பயன்படுத்துவதால் சிலைக்கு ஏதேனும் சேதாரம் ஆகக் கூடாது என்பதற்காகவே காந்தி சிலை 15 மீட்டர் தொலைவுக்கு இடமாற்றம் செய்யப்படுகிறது.