திருவண்ணாமலை மகாதீபம் இன்று நிறைவு

திருவண்ணாமலை மகாதீபம் இன்று நிறைவு

1 mins read

சென்னை: திரு­வண்­ணா­மலை மகா­தீ­பம் இன்­று­டன் நிறைவு பெறு­கிறது. திரு­வண்­ணா­ம­லை­யில் உல­கப் பிர­சித்தி பெற்ற அரு­ணா­ச­லேஸ்­வ­ரர் கோயி­லின் முக்­கிய நிகழ்­வான கார்த்­திகை மகா தீபம் இம்­மா­தம் 6ஆம் தேதி கோயி­லின் பின்­பு­றம் உள்ள மலை உச்­சி­யில் ஏற்­றப்­பட்­டது. திரு­வண்­ணா­ம­லை­யில் 2668 அடி உய­ரம் கொண்ட மலை­யில் ஏற்­றப்­பட்ட மகா தீபம் நேற்று 10வது நாளாக தொடர்ந்து எரிந்துகொண்­டி­ருந்­தது.

இந்த நிலை­யில், மகா­தீ­பம் இன்று வெள்­ளிக்­கி­ழமை இர­வு­டன் நிறை­வு­பெ­று­கிறது. ஜன­வரி 6ல் ஆருத்ரா தரி­ச­னத்­தின்­போது, மகா­தீப மை (தீபச்­சு­டர் பிர­சா­தம்) சிவ­கா­ம­சுந்­தரி சமேத நட­ரா­ஜ­ருக்கு அணி­வித்து பின்­னர் பக்­தர்­க­ளுக்கு தீப மை வழங்­கப்­படும்.