நியூயார்க்: உலகத்துக்குப் பெரும் சவாலாக உள்ள பயங்கரவாதத்தை அனைத்து நாடுகளும் ஒன்றி ணைந்து ஒரு முடிவுக்குக் கொண்டு வர வேண்டும் என மத்திய வெளி யுறவு அமைச்சர் எஸ். ஜெய்சங்கர் வலியுறுத்தி உள்ளார்.
ஐ.நா. பாதுகாப்பு மன்றத்தில் 15 உறுப்பு நாடுகள் உள்ளன. இந்த அமைப்புக்கு மாதத்துக்கு ஒரு உறுப்பு நாடு தலைமை வகிக்கும் நிலையில், டிசம்பர் மாதத்துக்கு இந்தியாவின் சார்பில் ஜெய்சங்கர் தலைமை தாங்கினார்.
அப்போது உரையாற்றிய அவர், "இவ்வுலகம் பாகிஸ்தானை பயங்கரவாதத்தின் மையப்புள்ளியாகப் பார்க்கிறது என்றும் பயங்கரவாதம் எங்கிருந்து உருவாகிறது என்பதை உலக நாடுகள் தெளிவாக தெரிந்து வைத்துள்ளன," என்றும் கூறினார்.
அப்போது இடைமறித்த பாகிஸ் தானிய பத்திரிகையாளர் ஒருவர், "இன்னும் எத்தனை காலத்துக்குத் தான் டெல்லி, காபூல், பாகிஸ்தானில் இருந்து பயங்கரவாதம் உருவாகுவதாக தெற்காசியா பார்க்கப்போகிறது," எனக் கேட்டார்.
அதற்கு, "இந்தக் கேள்வியை நீங்கள் தவறாக என்னிடம் கேட்டு விட்டீர்கள். இதனை நீங்கள் பாகிஸ்தான் அமைச்சரிடம்தான் கேட்கவேண்டும். அவரால்தான் உங்களது கேள்விக்கு தெளிவான விளக்கம் அளிக்கமுடியும்," என அமைச்சர் ஜெய்சங்கர் சுருக்கென்று பதிலளித்தார்.
"இன்னும் எத்தனை காலத்துக் குப் பயங்கரவாதத்தை பாகிஸ்தான் ஆதரிக்க விருப்பம் கொண்டுள்ளது என்பதற்கான சரியான பதிலையும் பாகிஸ்தான் அமைச்சர் சொல்வார்," என்றும் கூறினார்.
தொடர்ந்து பேசிய அவர், "உலகம் ஒன்றும் முட்டாள் அல்ல. அது எதையும் மறந்துவிடவில்லை. நிச்சயமாக பயங்கரவாதத்தைத் தூண்டி விடும் நாடுகளை விட்டுவைக்காது. நீங்கள் யாரையும் இனிமேலும் குழப்பமுடியாது.
"மக்களுக்கு எல்லாம் தெரியும். இனியாவது திருந்துங்கள். ஒரு நல்ல அண்டை நாடாக இருக்க முயற்சி செய்யுங்கள்," என்று தெரிவித்தவர், "உலகின் மற்ற நாடுகள் பொருளாதார வளர்ச்சி, முன்னேற்றம், மேம்பாடு போன்றவற்றுக்காக முயன்று வருவது போல நீங்களும் முயற்சி செய்யுங்கள்," என்று வலியுறுத்தியுள்ளார் ஜெய்சங்கர்.

