சென்னை: இசை மன்றங்கள் தமிழ்ப் பாடல்களுக்கு முக்கியத்துவம் அளிக்கவேண்டும் என முதல்வர் ஸ்டாலின் கேட்டுக் கொண்டுள்ளார்.
சென்னை 'மியூசிக் அகாடமி' யின் 96வது மாநாடு, இசைவிழா வில் கலைஞர்களுக்கு விருது களை வழங்கி உரையாற்றிய அவர், "விருதுபெற்ற அனைவரும் தங்களைப் போன்று பல திறமைசாலிகளை உருவாக்கவேண்டும்," எனக் கேட்டுக்கொண்டார்.
இசைக் கலை அமைப்புகள் பொழுதுபோக்கு அமைப்புகள் அல்ல என்றும் அவை கலை வளர்க்கும் பண்பாட்டு அமைப்புகள் என்றும் தெரிவித்த ஸ்டாலின், 'மியூசிக் அகாடமி' போன்ற கலை அமைப்புகள் தமிழ்ப் பாடல்களுக்கு முக்கியத்துவம் வழங்கவேண்டும் என வலியுறுத்தினார்.
தமிழ் இலக்கியங்களில் பல்லாயிரக்கணக்கான தமிழ்ப்பாடல்கள் உள்ளதைச் சுட்டிக்காட்டிய அவர், அப்பாடல்கள் இசை மன்றங்களில் தவறாது ஒலிக்கவேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.
"இசை வளா்த்தல் என்பது கலை வளா்த்தல் மட்டுமல்ல, தமிழ் வளா்த்தலும்தான். இதை மனதில் வைத்து அனைத்துக் கலைஞா்களும் கலை அமைப்புகளும் செயல்பட வேண்டும்.
"மொழி இருக்கும்வரைதான் கலை இருக்கும். பக்தி இசை, திரையிசை, மெல்லிசை, 'பாப்' இசை, 'ராக்' இசை என எந்த இசையாக இருந்தாலும் அவை தமிழிசையாக இருக்கவேண்டும் என்பதே எனது வேண்டுகோள்," என ஸ்டாலின் தெரிவித்தார்.

