பள்ளி மாணவிகளுக்குச் சொந்த செலவில் பத்து கழிவறைகளைக் கட்டித் தந்த ஆசிரியை

பள்ளி மாணவிகளுக்குச் சொந்த செலவில் பத்து கழிவறைகளைக் கட்டித் தந்த ஆசிரியை

1 mins read

கீழ்பென்னாத்துார்: திரு­வண்­ணா­மலை அருகே உள்ள அர­சுப் பள்­ளி­யில் தன் சொந்த செல­வில் ஆறரை லட்சம் ரூபாய் செல வழித்து, பத்து கழி­வ­றை­க­ளைக் கட்­டிக் கொடுத்­துள்ள ஆசி­ரி­யைக்கு பெற்றோர், பொதுமக்களிடம் இருந்து பாராட்­டு­கள் குவிந்து வரு­கின்­றன.

கீழ்பென்­னாத்­தூரை அடுத்த ஐங்­கு­ணம் அரசு மேல்­நி­லைப் பள்­ளி­யில் ஆங்­கில ஆசி­ரியையாகப் பணி­பு­ரி­யும் திரு­மதி ஆனி ரீட்டா, 50, பள்­ளி­யில் கழி­வ­றை­கள் இல்­லா­த­தால் மாண­வி­களும் ஆசி­ரி­யை­களும் அரு­கில் உள்ள வீடு­களுக்­குச் சென்று இயற்கை உபா­தையைக் கழிக்­கும் நிலை­யைக் கண்டு வேதனை அடைந்­தார்.

இதற்கு ஒரு தீர்வு காண, தன் சொந்த செல­வில் கழி­வ­றை­க­ளைக் கட்­டிக்­கொடுக்க முடிவு செய்­தவர், தமது சேமநல நிதியில் சேமித்த ஆறரை லட்சம் ரூபாய் பணத்தை எடுத்து தன் பள்ளி மாணவி களுக்காக முழு நேர­மும் தண்­ணீர் வச­தி­யு­டன் கூடிய கழி­வ­றை­களைக் கட்டி முடித்­துள்­ளார். இத­னால், பள்­ளி­யில் பயி­லும் 276 மாணவி களும் ஆசி­ரி­யை­களும் மகிழ்ச்சி அடைந்­துள்­ள­ நிலையில், தன் வாழ்­நாள் லட்­சி­யம் நிறை­வேறி உள்­ள­தா­கக் கூறியுள்ளார் ஆனி ரீட்டா.

நீண்ட நாளாக இருந்து வந்த தங்­க­ளது பிரச்­சி­னை­க­ளைப் புரிந்து­கொண்டு உத­வி­யி­ருக்­கும் நல்­லாசி­ரி­யைக்கு நன்றி சொல்ல வார்த்­தை­கள் இல்லை என்று மாண­வி­கள் மனம் நெகி­ழ்ந்து கூறியுள்ளனர்.