பயங்கரவாத செயல்பாடு: அரசியல் கட்சிப் பிரமுகர்கள் விசாரிக்கப்பட வாய்ப்பு

பயங்கரவாத செயல்பாடு: அரசியல் கட்சிப் பிரமுகர்கள் விசாரிக்கப்பட வாய்ப்பு

2 mins read

சேலம்: சேலத்­தில் துப்­பாக்கி தயா­ரித்த குற்­றச்­சாட்­டின் பேரில் கைதான இளை­யர்­கள் தொடர்­பான விசா­ரணை தீவி­ர­ம­டைந்­துள்­ளது.

அந்த இளை­யர்­க­ளுக்கு அர­சி­யல் கட்­சிப் பிர­மு­கர்­க­ளு­டன் தொடர்பு இருப்­பது தெரி­ய­வந்­துள்­ள­தா­க­வும் மிக விரை­வில் அந்­தப் பிர­மு­கர்­க­ளி­டம் காவல்­துறை விசா­ரணை நடத்த வாய்ப்­புள்­ள­தா­க­வும் கூறப்­ப­டு­கிறது.

சேலம் மாவட்­டத்­தைச் சேர்ந்த 24 முதல் 27 வய­துக்­குட்­பட்ட நவீன், சஞ்­சய் பிர­காஷ், கபி­லன் ஆகிய மூன்று இளை­யர்­கள் யூடி­யூப் காணொ­ளி­க­ளைப் பார்த்து துப்­பாக்கி, வெடி­குண்­டு­கள் தயா­ரித்து வந்­துள்­ள­னர். இது­கு­றித்த ரக­சி­யத் தக­வல் கிடைத்ததை அடுத்து தமி­ழக காவல்­துறை மூவ­ரை­யும் கைது செய்து, அவர்­க­ளி­டம் விசா­ரணை நடத்­தப்­பட்டு வந்த நிலை­யில், இந்த வழக்கு தேசிய புல­னாய்வு முக­மை­யி­டம் ஒப்­ப­டைக்­கப்­பட்­டது. மூவ­ரும் கைது செய்­யப்­பட்­ட­னர்.

விசா­ர­ணை­யில் அவர்­கள் விடு­தலைப் புலி­கள் இயக்­கத்­தின் ஆத­ர­வா­ளர்­கள் எனத் தெரி­ய­வந்­தது என்­றும் அவர்­க­ளி­டம் இருந்து துப்­பாக்­கி­கள் உள்­ளிட்ட ஆயு­தங்­கள் கைப்­பற்­றப்­பட்­ட­தா­க­வும் தக­வல் வெளி­யா­னது.

"விடு­தலைப் புலி­கள் இயக்­கத்­தைப் போன்று, தமி­ழ­கத்­தி­லும் புதிய இயக்­கத்தை துவங்கி உள்­ளோம். வணிக வளா­கங்­களை தாக்­க­வும் முக்­கிய தலை­வர்­களை கொல்­ல­வும் திட்­ட­மிட்டு செயல்­பட்­டோம்," என்று புல­னாய்வு முகமை அதி­கா­ரி­க­ளி­டம் கபி­லன் வாக்­கு­மூ­லம் அளித்­துள்­ளார்.

இந்­நி­லை­யில், கைதான மூன்று இளை­யர்­க­ளுக்­கும் தமி­ழ­கத்­தில் இயங்கி வரும் அர­சி­யல் கட்­சி­க­ளின் முக்­கி­யப் புள்­ளி­க­ளின் ஆத­ரவு இருப்­ப­தா­கக் கூறப்­ப­டு­கிறது. இது தொடர்­பா­கப் பல்­வேறு விவ­ரங்­களை புல­னாய்வு அதி­கா­ரி­கள் திரட்டி உள்­ள­தா­க­வும் அக்­கட்­சி­க­ளின் முக்­கி­யப் பிர­மு­கர்­க­ளி­டம் விசா­ரணை நடத்த வாய்ப்­புள்­ள­தா­க­வும் தக­வல்­கள் தெரி­விக்­கின்­றன.

மேலும், பயங்­க­ர­வாத செயல்­பா­டு­களில் தொடர்பு இருப்­பது உறு­தி­யா­னால் அந்­தப் பிர­மு­கர்­கள் கைதாக வாய்ப்­புள்­ள­தா­க­வும் ஊட­கச் செய்தி ஒன்­று கூறுகிறது.