தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

13 கிராம மக்கள் பேரணி; அமைச்சர்கள் பேச்சுவார்த்தை

2 mins read
5de4ae5b-41e7-45e6-97eb-532c3818cc4c
-

பரந்தூர் விமான நிலையத்துக்கு விவசாய நிலங்களைக் கையகப்படுத்த எதிர்ப்பு

காஞ்­சி­பு­ரம்: பரந்­தூர் விமான நிலைய கட்­டு­மா­னப் பணி­க­ளுக்­காக விவ­சாய நிலங்­க­ளைக் கைய­கப்­ப­டுத்த எதிர்ப்பு தெரி­வித்து 13 கிராம மக்­கள் நடத்­திய எதிர்ப்­புப் போராட்­டத்­தால் அப்­ப­கு­தி­யில் பர­ப­ரப்பு நில­வி­யது.

இதை­ய­டுத்து போராட்­டம் நடத்­தும் கிராம மக்­க­ளு­டன் இன்று அமைச்­சர்­கள் பேச்­சு­வார்த்தை நடத்த உள்­ள­னர்.

சென்னை விமான நிலையத்தில் பய­ணி­க­ளின் எண்­ணிக்கை அதி­க­ரித்து வரு­வதை அடுத்து, காஞ்­சி­பு­ரம் மாவட்­டம் பரந்­தூர் பகு­தி­யில் இரண்­டா­வது அனைத்­து­லக விமான நிலை­யம் அமைக்­கப்­பட உள்­ளது.

இதை­ய­டுத்து, புதிய விமான நிலை­யத்­துக்­காக சுமார் 4,500 ஏக்­கர் நிலத்தை கையகப்­ப­டுத்த முடிவு செய்­யப்­பட்­டுள்­ளது. அதற்­கான நட­வ­டிக்­கை­கள் தொடங்கி உள்­ளன.

இரண்­டா­யி­ரம் ஏக்­கர் அள­வி­லான விவ­சாய நிலங்­களும் 2,000 ஆயி­ரத்­துக்­கும் மேற்­பட்ட குடி­யி­ருப்­பு­க­ளை­யும் கைய­கப்­ப­டுத்த தமி­ழக அரசு முடிவு செய்­துள்­ள­தாக தக­வல் வெளி­யா­னதை அடுத்து, பரந்­தூர் பகு­தி­யில் போராட்­டம் வெடித்­தது.

விவ­சாய நிலங்­களை தர இய­லாது என 13 கிரா­மங்­க­ளைச் சேர்ந்த விவ­சா­யி­கள் எதிர்ப்பு தெரி­வித்­துள்­ள­னர்.

கடந்த பல நாள்­க­ளாக கிராம மக்­க­ளின் போராட்­டம் நீடித்து வரு­கிறது. நேற்று காலை இம்­மக்­கள் நிலங்­களை கையகப்­ப­டுத்த எதிர்ப்பு தெரி­வித்து பேர­ணி­யா­கச் சென்­ற­னர்.

மேலும், கையில் கறுப்­புக் கொடி ஏந்­திச் சென்ற கிராம மக்­கள் காஞ்­சி­பு­ரம் மாவட்ட ஆட்­சி­ய­ரி­டம் மனு அளிக்­கப் போவ­தாக தெரி­வித்­த­னர்.

எனி­னும், இந்­தப் பேர­ணியை காவல்­து­றை­யி­ன­ரும் அதி­கா­ரி­களும் நடு­வ­ழி­யில் தடுத்து நிறுத்­தி­னர். அப்­ப­குதி கோட்­டாட்­சி­யர், காவல்­துறை துணை கண்­கா­ணிப்­பா­ளர், தாசில்­தார் ஆகி­யோர் அடங்­கிய குழு­வி­னர் பேச்­சு­வார்த்தை நடத்­தி­னர்.

அப்­போது, இந்­தப் பிரச்­சினை தொடர்­பாக இன்று அமைச்­சர்­கள் பேச்­சு­வார்த்தை நடத்த இருப்­ப­தாக கிராம மக்­க­ளி­டம் உறுதி அளிக்­கப்­பட்­டது. எனவே தங்­கள் போராட்­டத்தை தற்­கா­லி­க­மா­கக் கைவி­டு­வ­தாக கிராம மக்­கள் தெரி­வித்­த­னர்.

இந்­த 13 கிராம மக்­களும் ஏற்­கெனவே தொடர்ந்து 145 நாள்­க­ளாக இரவு போராட்­டத்­தில் ஈடு­பட்டு வந்­த­னர். இதை­ய­டுத்து கடந்த நவம்­பர் மாதம் அமைச்­சர்­கள் நடத்­திய பேச்­சு­வார்த்­தையை அடுத்து அப்­போ­ராட்­டம் கைவி­டப்­பட்­டது.

இந்­நி­லை­யில், தங்­க­ளின் வாழ்­வா­தா­ரம் தொடர்­பான பிரச்­சி­னை­யில் தமி­ழக அரசு நல்ல முடிவு எடுக்க வேண்­டும் என வலி­யு­றுத்தி கிராம மக்­கள் மீண்­டும் போராட்­டத்தை தொடங்கி உள்­ள­னர். இன்று அமைச்­சர்­கள் எ.வ.வேலு, தங்­கம் தென்­ன­ரசு, அன்­ப­ர­சன் ஆகி­யோர் போராட்­டக்­கா­ரர்­க­ளு­டன் பேச்­சு­வார்த்தை நடத்த இருப்­ப­தா­கக் கூறப்­ப­டு­கிறது.

அச்­ச­ம­யம், கிராம மக்­க­ளின் கோரிக்­கை­கள், இழப்­பீடு, நிலம் கைய­கப்­ப­டுத்­தும் நட­வ­டிக்கை ஆகி­யவை குறித்து முக்­கிய முடி­வு­கள் எடுக்­கப்­பட வாய்ப்­புள்­ள­தா­கத் தெரி­கிறது.