முதல்வர் அறிவிப்பு: புலம்பெயர் தமிழர்களுக்கான தரவுத்தளம்

முதல்வர் அறிவிப்பு: புலம்பெயர் தமிழர்களுக்கான தரவுத்தளம்

1 mins read

சென்னை: வெளி மாநி­லம், வெளி நாடு­வாழ் தமி­ழர்­கள் குறித்த தரவு தளம் ஒன்று ஏற்­ப­டுத்­தப்­படும் என்று முதல்­வர் மு.க.ஸ்டா­லின் தெரி­வித்­துள்­ளார்.

மேலும், புலம்­பெ­யர் தமி­ழர் நல வாரி­யத்­தின் தலை­வர், உறுப்­பி­னர்­களை நிய­ம­னம் செய்து அவர் உத்­த­ர­விட்­டுள்­ளார்.

இது தொடர்­பாக தமி­ழக அரசு வெளி­யிட்­டுள்ள செய்­திக்­கு­றிப்­பில், வெளி­மா­நி­லங்­கள், வெளி­நா­டு­களில் வசிக்­கும் தமி­ழர்­க­ளுக்­கென நலத் திட்­டங்­கள், அவர்­க­ளுக்­கான தூத­ரக உத­வி­கள், செம்­மொ­ழி­யாம் தமிழ்­மொ­ழி­யைத் தழைத்­தோங்­கச் செய்­திட வெளி­நா­டு­களில் தமிழ்க் கல்வி, கலை, பண்­பாடு, கருத்­துப் பரி­மாற்­றத்­திற்­கென பல்­வேறு சீர்­மிகு நட­வ­டிக்­கை­களை தமிழ்­நாடு அரசு தொடர்ந்து எடுத்து வரு­வ­தா­கக் குறிப்­பி­டப்­பட்­டுள்­ளது.

புலம்­பெ­யர் தமி­ழர் நல­வா­ரி­யத்­தின் தலை­வ­ராக திருப்­பூர் மாவட்­டம், கார்த்­தி­கேய சிவ­சே­னா­பதி நிய­மிக்­கப்­பட்­டுள்­ளார்.

மொரி­ஷி­யஸ் நாட்­டில் வசிக்­கும் ஆறு­மு­கம் பர­சு­ரா­மன், லண்­ட­னில் வசிக்­கும் முஹம்­மது பைசல், ஐக்­கிய அரபு சிற்­ற­ர­சில் வசிக்­கும் சித்­திக் சையது மீரான், வட­அ­மெ­ரிக்­கா­வில் வசிக்­கும் கால்­டு­வெல் வேள்­நம்பி, சிங்­கப்­பூ­ரில் வசிக்­கும் ஜி.வி.ராம் என்­கிற கோபா­ல­ கிருஷ்­ணன் வெங்­க­ட­ர­ம­ணன், மும்­பை­யில் வசிக்­கும் அ. மீரான், சென்­னை­யில் வசிக்­கும் வழக்­க­றி­ஞர் புகழ்­காந்தி ஆகி­யோர் அரசு சாரா உறுப்­பி­னர்­க­ளாக நிய­மிக்­கப்­பட்­டுள்­ள­னர்.

இவ்­வா­ரிய உறுப்­பி­னர்­க­ளின் பத­விக் காலம், ஆணை வெளி­யி­டப்­பட்ட நாளி­லி­ருந்து மூன்று ஆண்­டு­கள் ஆகும்.

இவ்­வா­ரி­யம், வெளி மாநி­லம், வெளி­நா­டு­வாழ் தமி­ழர்­க­ளுக்­கான நலத் திட்­டங்­களை செம்­மை­யா­கச் செயல்­ப­டுத்­திட ஏது­வாக, 5 கோடி ரூபாய் 'வெளி­நா­டு­வாழ் தமி­ழர் நல­நிதி' என மாநில அர­சின் முன்­ப­ணத்­தைக் கொண்டு உரு­வாக்­கப்­படும்.