சேலம் இரும்பாலையை விற்க முயற்சி; 4,000 ஏக்கர் நிலத்தை கேட்கிறார் ராமதாஸ்

சேலம் இரும்பாலையை விற்க முயற்சி; 4,000 ஏக்கர் நிலத்தை கேட்கிறார் ராமதாஸ்

2 mins read

சேலம்: சேலம் இரும்­பா­லைக்குப் புத்­து­யி­ரூட்ட முடி­யாதா, அப்­ப­டி­யென்­றால் அதற்கு வழங்­கப்­பட்ட 4,000 ஏக்­கர் நிலத்தை வழங்­கி­ய­வர்­க­ளுக்கே திருப்­பிக் கொடுக்க வேண்­டும் என்று மத்­திய அர­சுக்கு ராம­தாஸ் கோரிக்கை விடுத்­துள்­ளார். பாமக நிறு­வ­னர் ராம­தாஸ் நேற்று அறிக்கை ஒன்றை வெளி­யிட்­டார். அதில் புகழ்பெற்ற சேலம் இரும்­பா­லையை மத்­திய அரசு விற்­பது குறித்து அவர் கேள்வி எழுப்பி­ உள்­ளார்.

"நாடா­ளு­மன்ற மாநி­லங்­க­ள­வை­யில் இது தொடர்­பாக எழுப்­பப்­பட்ட வினாக்­க­ளுக்கு விடை­ய­ளித்த மத்­திய அமைச்­சர் ஜோதி­ரா­தித்ய சிந்­தியா, "சேலம் இரும்­பாலை தனி­யா­ருக்கு விற்­கப்­ப­டு­வது உறுதி. மத்­திய நிதி­ய­மைச்­சின் முத­லீடு மற்­றும் பொதுச் சொத்து மேலாண்­மைத் துறை­யும் இரும்­புத் துறை அமைச்­சும் இதற்­கான முயற்­சி­களில் ஈடு­பட்­டுள்­ளன. இதற்­காக முத­லீட்­டா­ளர்­களை இரும்­பா­லைக்கு அழைத்துச் செல்­வ­தற்­காக முயற்­சி­களை மேற்­கொண்­டோம். ஆனால், அதற்­கான பாது­காப்­புச் சூழலை மாநில அரசு ஏற்­ப­டுத்­தித் தர­வில்லை. இருந்­தா­லும் அதற்­கான நிதி ஒப்­பந்­தப் புள்­ளி­கள் தாக்­கல் செய்­யப்­பட வேண்­டும் என்று எங்­க­ளுக்கு தெரி­விக்­கப்­பட்­டது. அது, ஜன­வரி மாதத்­தில் ஏதே­னும் ஒரு நாளில் நிக­ழும் என்று நம்­பு­கி­றேன்," என்று கூறி­யுள்­ளார்.

"இந்த நிலை­யில் சேலம் இரும்­பா­லையைத் தனி­யா­ருக்கு விற்­கும் முயற்­சி­களை மத்­திய அரசு தீவி­ரப் ­ப­டுத்தி வரு­வ­தையே அமைச்­சர் சிந்­தி­யா­வின் பதில் உணர்த்­து­கிறது. இந்­திய இரும்பு எஃகு நிறு­வ­னத்­திற்குச் சொந்­த­மான சேலம் இரும்­பா­லையை விற்­பனை செய்­வ­தற்­கான முயற்­சி­கள் கடந்த பல ஆண்­டு­க­ளாக மேற்­கொள்­ளப்­பட்டு வரு­கின்­றன. கடை­சி­யாக கடந்த 2019ஆம் ஆண்டு ஜூலை மாதம் 4ஆம் தேதி உலக அள­வில் ஒப்­பந்­தப் புள்­ளி­கள் கோரப்­பட்ட நிலை­யில் எவ­ரும் ஒப்­பந்­தப் புள்ளி தாக்­கல் செய்ய முன்­வ­ர­வில்லை. அதன்­பின் கொரோனா கார­ண­மாக அந்த முயற்­சி­கள் நிறுத்திவைக்­கப்­பட்­டி­ருந்த நிலை­யில், இப்­போது அவற்றை மத்­திய அரசு மீண்­டும் தொடங்­கி­யுள்­ளது.

சேலம் இரும்­பாலை தமி­ழ­கத்­தின் அடை­யா­ளம், அது தமி­ழ­கத்­தின் பெருமை. அந்த இரும்­பாலை தமி­ழ­கத்­திற்கு வரவேண்­டும் என்­ப­தற்­காக சேலம் பகுதி மக்­கள் செய்த தியா­கம் அள­விட முடி­யா­தது. அப்­ப­குதி மக்­கள் தங்­க­ளின் வாழ்­வா­தா­ர­மாக விளங்­கிய 4,000 ஏக்­கர் நிலங்­களை, ஓர் ஏக்­கர் ரூ.5,000க்கும் குறை­வான விலை­யில் கொடுத்­த­தால்தான் சேலம் இரும்­பாலை உரு­வா­னது. இத்­த­கைய பின்­னணி கொண்ட சேலம் இரும்­பா­லையை உல­கத்­த­ரம் வாய்ந்த ஆலை­யாக தரம் உயர்த்து வதே ­அந்த ஆலை அமை­வ­தற்­காக சேலம் மக்­கள் செய்த தியா­கங்­க­ளுக்கு மத்­திய அரசு செய்­யும் பதி­லு­த­வி­யா­கும்.

சேலம் இரும்­பா­லையை நவீ­ன­ ம­ய­மாக்கி புத்­து­யி­ரூட்­டு­வ­தற்­கான வாய்ப்­பு­கள் ஆயி­ரம் இருந்­தா­லும்­கூட, அதை தனி­யார் மய­மாக்க வேண்­டும் என்று மத்­திய அரசு துடிக்­கிறது. அதற்கு கார­ணம், அந்த ஆலைக்­குச் சொந்­த­மான 4,000 ஏக்­கர் நிலங்­களை தனி­யா­ருக்கு தாரை வார்க்க வேண்­டும் என்­பதே. மத்­திய அர­சின் இந்த முயற்சி ஒரு போதும் வெற்றி பெறாது. அதை தமி­ழ­க­மும் அனு­ம­திக்­காது.

ஒரு­வேளை சேலம் இரும்­பா­லைக்குப் புத்­து­யி­ரூட்ட முடி­யாது என்­றால் அந்த ஆலைக்கான 4,000 ஏக்­கர் நிலங்­க­ளை அவற்றை வழங்­கிய உரி­மை­யா­ளர்­க­ளி­டம் அரசு ஒப்­ப­டைக்க வேண்­டும்," என அறிக்­கை­யில் ராம­தாஸ் கூறியுள்ளார்.