ஸ்டாலின்: தரமான கல்வியில் தமிழகத்திற்கு 2வது இடம்

ஸ்டாலின்: தரமான கல்வியில் தமிழகத்திற்கு 2வது இடம்

2 mins read

சென்னை: இந்­தி­யா­வில் தர­மான கல்வி வழங்­கு­வ­தில் தமி­ழ­கம் 2வது இடத்­தில் உள்­ளது. முதல் இடத்­தைப் பிடிப்­போம் என்று தமி­ழக முதல்­வர் மு.க.ஸ்டா­லின் கூறி­யுள்­ளார்.

கிண்­டி­யில் உள்ள நட்­சத்­திர ஹோட்­ட­லில் 'நம்ம ஸ்கூல் பவுண்­டே­ஷன்' திட்­டத்­தின் தொடக்க விழா அண்­மை­யில் நடை­பெற்­றது.

"இந்­தி­யா­வி­லேயே தர­மான கல்வி வழங்­கு­வ­தில் தமிழ்­நாடு 2வது இடத்­தில் இருந்துகொண்டு இ­ருக்­கிறது. முதல் இடத்­திற்கு முந்­து­வ­தற்­கான அனைத்து பணி­க­ளை­யும் பள்ளி கல்­வித்­துறை சிறப்­பாக செய்­கிறது.

அந்த வரி­சை­யில், நம் பள்ளி - நம் பெருமை என்ற திட்­டத்தை இங்கே தொடங்கி வைத்­தி­ருக்­கி­றேன். பள்­ளிப்­பிள்­ளை­கள் எந்­த­வி­த­மான தடங்­க­லும் இல்­லா­மல் மன­நி­றை­வோடு கற்­கக்­கூ­டிய சூழலை திரா­விட மாடல் ஆட்சி உரு­வாக்கி தந்­து­கொண்டு இருக்­கிறது.

கல்­வி­தான் யாரா­லும் திருட முடி­யாத சொத்து. அந்த அறி­வுச்­சொத்தை உரு­வாக்கித் தந்து வரு­கி­றோம்.

அரசு பள்­ளி­கள் என்­பவை அர­சின் சொத்­து­கள் மட்­டு­மல்ல, அது மக்­க­ளு­டைய சொத்­து­க­ளு­மா­கும். வெளிப்­ப­டைத்­தன்மை இதை மனதில் வைத்­து பள்ளி மேலாண் மைக்குழுக்­களை அமைத்­தோம். 37,558 பள்ளி மேலாண்மைக் குழுக்­கள் மறு­சீ­ர­மைப்பு செய்­யப்­பட்­டுள்­ளன. அவை மூலம் பெற்­றோர், ஆசி­ரி­யர்­கள், மாண­வர்­கள், முன்­னாள் மாண­வர்­கள், ஊராட்­சி­கள் மற்­றும் சமூ­கத்­தின் நலம்­வி­ரும்­பி­கள் அனை­வ­ரும் ஒரு கட்­ட­மைப்­பாக, நிறு­வ­ன­மாக ஒன்­றி­ணைந்­த­னர். தங்­கள் பள்­ளிக்கு எது தேவையோ அதனை அவர்­களே உரு­வாக்கித் தர முன்­வந்­துள்­ள­னர் என்று முதல்­வர் ஸ்டா­லின் தெரி­வித்­தார். "எல்­லா­வற்­றை­யும் அர­சாங்­கம் செய்­து­விட முடி­யாது. மக்­களும் கைகோர்க்க வேண்­டும். நம் பள்­ளி­கள் மேம்­பட உல­கத் தமி­ழர்­களும், தொழில் அதி­பர்­களும் வாரி, வாரி வழங்­குங்­கள். நாம் விரும்­பும் கன­வுப்­பள்­ளியை நாம் உரு­வாக்­கு­ வோம்," என்­றார் முதல்­வர்.