பன்னீர்செல்வம் தரப்பு இன்று கூடி ஆலோசனை; போட்டி கூட்டம் அறிவிப்பு

பன்னீர்செல்வம் தரப்பு இன்று கூடி ஆலோசனை; போட்டி கூட்டம் அறிவிப்பு

1 mins read

சென்னை: அதி­முக மாவட்ட செய­லா­ளர்­கள் கூட்­டம் இம்­மா­தம் 27ஆம் தேதி நடை­பெ­றும் என கட்­சி­யின் இடைக்­கால பொதுச்­செ­ய­லா­ளர் எடப்­பாடி பழ­னி­சாமி அறி­வித்­துள்­ளார்.

இந்­தக் கூட்­டத்­தில் அனைத்து மாவட்ட செய­லா­ளர்­களும் பங்­கேற்க வேண்­டும் என்று தெரி­விக்­கப்­பட்­டுள்­ளது.

மேலும் எம்.எல்.ஏ.க்கள், எம்.பி.க்கள், செய்தி தொடர்­பா­ளர்­க­ளுக்­கும் அழைப்பு விடுக்­கப்­பட்­டுள்­ளது.

கூட்­டத்­தில் நாடா­ளு­மன்­றத் தேர்­தல் பணி­கள், கட்­சி­யின் கட்­ட­மைப்பு மற்­றும் பொதுக்­குழு தொடர்­பான உச்ச நீதி­மன்ற வழக்கை எதிர்­கொள்­வது தொடர்­பாக விவா­திக்­கப்­படும் என தெரி­கிறது.

கட்­சி­யி­லி­ருந்து நீக்­கப்­பட்ட ஓ.பன்­னீர்­செல்­வம் தலை­மை­யில் இன்று மாவட்ட செய­லா­ளர்­கள் கூட்­டம் நடை­பெற உள்ள நிலை­யில் எடப்­பாடி பழ­னி­சா­மி­யின் இந்த அறி­விப்பு வெளி­யா­கி­யுள்­ளது.

ஓ.பன்­னீர்­செல்­வம் தனது ஆத­ர­வா­ளர்­களை அனைத்து மாவட்­டங்­க­ளுக்­கும் நிய­ம­னம் செய்­தார்.

அனைத்து சார்பு அணி­க­ளுக்­கும் புதிய நிர்­வா­கி­கள் நிய­மிக்­கப்­பட்­ட­னர். தலை­மைக் கழக நிர்­வா­கி­க­ளை­யும் அவர் நிய­மித்­துள்­ளார்.

இந்த நிய­ம­னங்­கள் முடிந்த நிலை­யில் இன்று நடை­பெ­றும் கூட்­டத்­தில் ஓ.பன்­னீர்­செல்­வம் முக்­கிய முடி­வு­களை எடுக்­க­வுள்­ள­தா­கக் கூறப்­ப­டு­கிறது.