புதிய தேர்தல் உத்தி; காங்கிரஸ் கூட்டணியை விரும்பும் கமல்

புதிய தேர்தல் உத்தி; காங்கிரஸ் கூட்டணியை விரும்பும் கமல்

1 mins read
0eda4fc7-4379-47c0-a34b-5ca889cc206e
-

சென்னை: மக்­கள் நீதி மய்­யம் தலை­வர் கமல்­ஹா­சன் ராகுல் காந்­தி­யின் நடைப் பய­ணத்­தில் பங்­கேற்­ப­தாக அறி­வித்­துள்­ளது புதிய தேர்­தல் உத்­தி­யாக விமர்­சிக்­கப் ­ப­டு­கிறது.

கமல்­ஹா­ச­னுக்கு ஏற்­பட்­டுள்ள இந்த திடீர் மாற்­றத்­தால் காங்­கி­ர­சார் மகிழ்ச்­சி­ய­டைந்­துள்­ள­னர்.

வரு­கிற 24ஆம் தேதி டெல்­லி­யில் ராகுல் நடத்­தும் நடைப்­ப­ய­ணத்­தில் கமல் 50க்கும் மேற்­பட்ட தமது கட்­சித் தொண்­டர்­க­ளு­டன் கலந்து கொள்­கி­றார்.

நாடா­ளு­மன்­றத் தேர்­த­லாக இருப்­ப­தால் தேசிய கட்­சி­யு­டன் கூட்­டணி வைத்­துக்­கொள்ள விரும்பு­வ­தா­கத் தெரி­கிறது.

அது­வும் காங்­கி­ரஸ் இருக்­கும் அணி பல­மான அணி­யா­க­வும் பா.ஜன­தா­வுக்கு மாற்­றா­க­வும் இருக்­கும் என்­றும் அவர் நம்­பு­கி­றார்.

இத­னால் காங்­கி­ர­சு­டன் அவர் கைகோர்க்க விரும்­பு­வ­தா­கக் கூறப்­ப­டு­கிறது.

கொள்கை ரீதி­யாக பார­திய ஜன­தா­வு­டன் உடன்­பாடு வைத்­துக்­கொள்ள இய­லாது என்­ப­தால் காங்­கி­ர­சு­டன் பய­ணிக்க முடிவு அவர் செய்து விட்­டார். கம­லின் வருகை காங்­கி­ர­சுக்குப் பலம் கொடுக்­கும் என்று காங்­கி­ர­சும் எதிர்­பார்க்­கிறது.

ஒரு­வேளை இந்­தக் கூட்­டணி உறு­தி­யா­கி­விட்­டால் காங்­கி­ர­சு­டன் கூட்­டணி அமைத்து தேர்­தலை சந்­திக்­க­வும் மக்­கள் நீதி மய்­யம் தயா­ராக உள்­ளது.

கமல்ஹாசனின் புதிய உத்தி பற்றி காங்கிரஸ் மூத்த நிர்வாகிகளிடம் கேட்டபோது, "ஜனநாயகத்தை விரும்புபவர் கமல். மதத்தின் பெயரால் மக்களைப் பிரிப்பதை ஏற்றுக்கொள்ள மாட்டார். எனவேதான் காங்கிரசுடன் கூட்டணி அமைக்க அவர் விரும்பு கிறார்," என்று கூறினர்.