சென்னை: இவ்வாண்டு இந்திய நாட்டிய திருவிழா மாமல்லபுரம் கடற்கரை கோயில் வளாகம் மற்றும் தீவுத் திடல் ஆகிய இடங்களில் வருகிற 23ஆம் தேதி தொடங்கி, ஜனவரி 12ஆம் தேதி வரை நடைபெறும் என்று அமைச்சர் ராமச்சந்திரன் அறிவித்துள்ளார்.
சென்னையில் நடைபெற்ற சுற்றுலா வளர்ச்சிக் கழகக் கூட்டத்தில் அவர் இந்த விவரங்களை வெளியிட்டார்.
"பரதநாட்டியம், மோகினியாட்டம், மணிப்பூரி, ஒடிசி, குச்சிப்புடி, கரகம், காவடி, தப்பாட்டம், ஒயிலாட்டம் உள்பட பல்வேறு நடனங்கள், கிளாரினெட், சாக்ஸபோன், நாதஸ்வரம், தவில் உள்ளிட்ட பல்வேறு இசைக்கருவிகளின் இசையுடன் இணைந்து 63க்கும் மேற்பட்ட குழுக்களின் கண்கவர் கலை நிகழ்ச்சிகள் நடைபெறுகிறது," என்றார் அமைச்சர். இந்திய நாட்டிய திருவிழா நிகழ்ச்சிகள் முழுவதும் தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழகத்தின் சமூக வலைத்தளங்களின் மூலம் நேரலையாக ஒளிபரப்ப ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என்றும் அமைச்சர் ராமச்சந்திரன் தெரிவித்தார்.

