சென்னை: தமிழகம், புதுச்சேரியில் இம்மாதம் 23, 24ஆம் தேதிகளில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இதன் காரணமாக மீனவர்கள் தென்மேற்கு வங்க கடல் மற்றும் மன்னார் வளைகுடாவிற்கு வரும் 22ஆம் தேதி வரை செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப் பட்டுள்ளது.
தெற்கு வங்க கடலின் மத்திய பகுதி மற்றும் கிழக்கு இந்தியப் பெருங்கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி நீடிப்பதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இதன் எதிரொலியால் தமிழகம், புதுவையில் உள்ள கடலோர பகுதிகளில் வரும் 23, 24ம் தேதிகளில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

