வாட்ஸ்அப் மூலம் மாணவியிடம் ஆபாசமாகப் பேசி பாலியல் தொல்லை கொடுத்த மாணவர் கைது

வாட்ஸ்அப் மூலம் மாணவியிடம் ஆபாசமாகப் பேசி பாலியல் தொல்லை கொடுத்த மாணவர் கைது

2 mins read

சென்னை: வாட்ஸ்­அப் மூலம் மாண­விக்குப் பாலி­யல் தொல்லை கொடுத்த மாண­வரை காவல்­துறை யினர் கைது செய்­துள்­ள­னர்.

ஆரம்பத்தில் நல்ல நண்­பர் போல பழ­கிய அவர் பின்­னர் ஆபாச படங்­களைக் கேட்டு வற்­பு­றுத்­தி­ய­தாக தனது புகா­ரில் மாணவி தெரி­வித்­துள்­ளார்.

சென்னை திரு­வொற்­றி­யூர் அம்­பேத்­கர் நக­ரைச் சேர்த்த புனிதா (புனை பெயர்), பாரி­மு­னை­யில் உள்ள தனி­யார் மக­ளிர் கலைக் கல்­லூ­ரி­யில் வர­லாறு 2ஆம் ஆண்டு படித்து வரு­கி­றார். இவர் கல்­லூ­ரிக்கு தின­மும் பேருந்­தில் சென்று வரு­கி­றார்.

அதே பேருந்­தில் பய­ணிக்­கும் ஆர். கே. நகர் அரசு கலைக் கல்­லூ­ரி­யில் பி.ஏ படித்து வரும் வண்­ணா­ரப் பேட்­டை­யைச் சேர்ந்த பரத், 19, என்­ப­வ­ரு­டன் மாண­விக்­குப் பழக்­கம் ஏற்­பட்டு உள்­ளது. அவர்­க­ளின் நட்பு நாளொரு மேனி­யும் பொழு­தொரு வண்­ண­மு­மாக வளர்ந்­தது.

இரு­வ­ரும் தங்­க­ளின் கைபேசி எண்­க­ளைப் பரி­மா­றிக் கொண்­ட­னர்.

இதன் பிறகு இரு­வ­ரும் அடிக்­கடி வாட்ஸ்­அப் உரை­யா­டல் மற்­றும் காணொளி வழி­யா­கப் பேசி வந்­துள்­ள­னர்.

இம்­மா­தம் 15ஆம் தேதி இர­வில் மாண­வி­யும், கல்­லூரி மாண­வன் பரத்­தும் இரவு வீடி­யோ­கா­லில் பேசிக் கொண்டு இருந்­த­னர். அப்­போது அந்த மாண­வன், திடீ­ரென மாண­வி­யின் ஆடை­யைக் கழற்று­மாறு கூறி வற்­பு­றுத்தியுள்­ளார்.

நண்­ப­னாக நினைத்­துப் பழ­கி­ய­வர் இது­போன்ற செய­லில் ஈடு­பட்­ட­தால் மாணவி அதிர்ச்­சி­ய­டைந்­தார்.

உடனே கைபேசி இணைப்பை மாணவி துண்­டித்­து­விட்­டார். இருப்­பி­னும் பரத் தொடர்ந்து அந்த மாண­விக்கு விடா­மல் அழைத்து பாலி­யல் தொல்லை கொடுத்து உள்­ளார்.

இத­னால் பயந்­து­போன மாணவி, உடனே சம்­ப­வம் குறித்து பெற்­றோ­ரி­டம் அழுது நடந்­த­தைத் தெரி­வித்­தார்.

இதை­ய­டுத்து பெற்­றோர் மற்­றும் மாணவி திரு­வொற்­றி­யூர் அனைத்து மக­ளிர் காவல் நிலை­யத்­தில் இந்த சம்­ப­வம் தொடர்­பில் புகார் அளித்­த­னர்.

அதன்­பே­ரில் காவல்­துறை வழக்­குப் பதிவு செய்து பரத்தைக் கைது செய்­த­னர்.