கொரோனா பாதிப்பை ஈடுகட்ட கட்டுமானங்களுக்கு அவகாசம்

கொரோனா பாதிப்பை ஈடுகட்ட கட்டுமானங்களுக்கு அவகாசம்

2 mins read
e26d2fcd-e7fa-4a31-9119-6d7cef710719
-

சென்னை: தமி­ழ­கத்­தில் கொரோனா தொற்­றுக் கால­கட்­டத்­தில் ஏரா­ள­மான கட்­டு­மா­னத் திட்­டங்­கள் முடங்­கிப்­போ­யின. கட்­டு­மா­னத்­திற்­கான அனு­ம­தி­யைப் பெற்­றும் அந்­தக் கால­கட்­டம் முடி­வுற்­றும் கட்­டு­மா­னத் திட்­டங்­களை முடிக்க முடி­யா­மல் பலர் திணறி வரு­கின்­ற­னர்.

பின்­னர் படிப்­ப­டி­யாக தளர்­வு­கள் வந்த பின், கட்­டு­மானத் தொழில்­கள் சூடு­பி­டிக்­கத் தொடங்­கின. இருப்­பி­னும் மணல், சிமென்ட, ஜல்லி, கான்­கி­ரீட் கம்­பி­கள், எம்­சேண்ட் உள்­ளிட்ட கட்­டு­மா­னப் பொருள்­க­ளின் விலை­கள் அதி­க­ரித்­துள்­ள­தும் கட்­டு­மா­னப் பணி­கள் முடங்­கி­ய­தற்கு கார­ண­மா­கி­யுள்­ளன.

அனைத்­துக் கட்­டு­மா­னப் பொருள்­க­ளின் விலை­யும் அதி­க­ரித்­துள்­ள­தால் தமி­ழ­கத்­தில் ஆயி­ரக்­க­ணக்­கான கட்­டு­மா­னப் பணி­கள் முடங்­கிப்­போ­யுள்­ளன.

விலை­யேற்­றத்­திற்கு முன் ஒப்­பந்­தம் செய்­யப்­பட்ட கட்­ட­டப் பணி­கள், விலை உயர்­வால் ஏற்­கெ­னவே ஒத்­துக்­கொண்ட தொகைக்­குள் கட்­ட­டத்­தைக் கட்­டிக்­கொ­டுக்க முடி­யாத நிலைக்கு கட்­டு­நர்­களும் ஒப்­பந்­தப் பொறி­யா­ளர்­களும் தள்­ளப்­பட்­டுள்­ள­னர்.

இந்­நி­லை­யில் கொரோனா தொற்­றால் பாதிக்­கப்­பட்ட கட்­டு­மா­னத் திட்­டங்­க­ளுக்­கான அனு­ம­தியை மேலும் இரண்டு ஆண்டு காலம் நீட்­டிப்­ப­தாக தமி­ழக வீட்டு­வ­ச­தித் துறை அறி­வித்­துள்­ளது.

தமி­ழ­கத்­தில் அம­லில் உள்ள ஒருங்­கி­ணைந்த கட்­டட விதி­க­ளின் படி தனி வீடு­கள், அடுக்­கு­மாடி குடி­யி­ருப்­பு­கள் கட்­டும் திட்­டத்­திற்­கான அனு­ம­திக்கு விண்­ணப்­பிக்­கும் போது, முத­லில் 5 ஆண்­டு­கள் அனு­ம­தி­ய­ளிக்­கப்­ப­டு­வ­தாக கூறப்­பட்­டுள்­ளது.

தொற்றுக் கால​த்தில் கட்­டுப்­பாடு­கள் தளர்த்­தப்­பட்­டும் கட்­டு­மா­னத் துறை பெரி­தும் பாதிக்­கப்­பட்­டுள்­ளது.

இதனை கருத்­தில் கொண்டு, கட்­டு­மா­னத் திட்­டத்­திற்­கான அனு­மதி வழங்­கப்­பட்ட கால அவ­கா­சத்தை நீட்­டித்து வழங்க வேண்­டும் என கட்­டு­மான நிறு­வ­னத்­தி­னர் கோரிக்கை விடுத்­தி­ருந்­த­னர்.

அவர்­க­ளின் கோரிக்கை அடிப்­ப­டை­யில், குறிப்­பாக கடந்த 2014ஆம் ஆண்டு ஏப்­ரல் ஒன்­றாம் தேதி முதல் இந்­தாண்டு மார்ச் 31ஆம் தேதி வரை­யி­லான கால­கட்­டத்­தில் கட்­ட­டம் கட்டி முடிப்­ப­தற்­கான அனு­மதி பெற்­ற­வர்­க­ளின் அனு­ம­திக்­கான கால அவ­கா­சம் நீட்­டிக்­கப்­பட்­டுள்­ளது.

கட்­டு­மா­னத் திட்­டங்­க­ளின் இழப்பை கருத்­தில் கொண்டு மேலும் இரண்டு ஆண்­டு­க­ளுக்கு நீட்­டிக்­கப்­ப­டு­வ­தாக தமி­ழக வீட்­டு­வ­ச­தித்­துறை தெரி­வித்­துள்­ளது.