குரோம்பேட்டை: தமிழகத்தை விளையாட்டுத்துறையில் இந்தியாவின் தலைசிறந்த மாநிலமாக மாற்றும்படி அத்துறையின் அமைச்சராகப் புதிதாகப் பதவியேற்றிருக்கும் உதயநிதி ஸ்டாலினை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தலைவர் என்.சங்கரய்யா வாழ்த்துத் தெரிவித்துள்ளார்.
இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சராக உதயநிதி ஸ்டாலின் அண்மையில் பொறுப்பேற்றார். இதனையொட்டி விடுதலைப் போராட்ட வீரரும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவருமான என்.சங்கரய்யாவை குரோம்பேட்டையில் உள்ள அவரது இல்லத்தில் உதயநிதி நேற்று சந்தித்தார்.
அப்போது, "இந்தியாவின் சார்பில் தமிழகத்திலிருந்து ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்கும் வீரர்கள், பதக்கங்களை வெல்லும் வகையில் பயிற்சி அளியுங்கள். அனைத்து மாவட்டங்களிலும் விளையாட்டுத் துறையை மேம்படுத்துங்கள். நீங்கள் நிர்வகிக்கும் அனைத்துத் துறைகளிலும் வெற்றிகரமாக செயல்பட வாழ்த்துகள் என்று கூறி, கேரள முன்னாள் முதல்வரும் மார்க்சிய அறிஞருமான இஎம்எஸ் நம்பூதிரிபாட் எழுதிய புத்தகம் ஒன்றைப் பரிசாக அளித்தார்.

