ஜனவரி 17ஆம் தேதி அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு

ஜனவரி 17ஆம் தேதி அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு

1 mins read

மதுரை: மதுரை மாவட்­டத்­தின் அலங்­கா­நல்­லூ­ரில் ஜல்­லிக்­கட்டு நடக்­கும் வாடி­வா­சல் அருகே காளி­யம்­மன் கோயில் உள்­ளது.

இக்­கோ­யில் விழா­வில் காப்பு கட்­டும் நிகழ்ச்சி நேற்று முன்­தி­னம் தொடங்­கி­யது.

ஜன­வரி 3, 4ஆம் தேதி­களில் இக்­கோ­யில் திரு­விழா நடை­பெ­றும்.

அத­னைத் தொடர்ந்து ஜன­வரி 17ஆம் தேதி ஜல்­லிக்­கட்டு நடை­பெ­றும்.

இக்­கோ­யில் திரு­விழா தொடங்­கி­ய­தை­யொட்டி, 15 நாள்கள் மாடு­பிடி வீரர்­கள், ஊர் மக்­கள் காப்பு கட்டி விர­தம் இருப்­பர்.

பொங்­கல் பண்­டி­கை­யை­யொட்டி மதுரை மாவட்­டத்­தில் அவ­னி­யா­பு­ரம், பால­மேடு, அலங்­கா­நல்­லூ­ரில் ஜல்­லிக்­கட்­டுப் போட்­டி­க­ளுக்­கான ஏற்­பா­டு­கள் தீவி­ர­ம­டைந்­துள்­ளன.

இப்­போட்­டி­யைத் தொடங்­கி­வைக்க முதல்­வர் மு.க.ஸ்டா­லின், அமைச்­சர் உத­ய­நிதி ஆகி­யோரை அழைக்க ஜல்­லிக்­கட்டு விழா குழு­வி­னர் முடிவு செய்­துள்­ள­தா­கக் கூறப்­ப­டு­கிறது.

இம்­முறை நடக்­க­வி­ருக்­கும் ஜல்­லிக்­கட்­டுப் போட்­டி­யில் வெல்­லும் மாடு­பிடி வீரர்­க­ளுக்­கும் வெல்­லும் காளை­க­ளுக்­கும் பல லட்ச ரூபாய் மதிப்­பி­லான ஏரா­ள­மான பரி­சுப் பொருள்­கள் அளிக்­கப்­படும் என்று எதிர்­பார்க்­கப்­ப­டு­கிறது.

அனைத்துவகைச் செய்திகளும் ஒரே இடத்தில்.

இந்­தப் போட்­டியை, வாடி­வா­சல் அருகே உள்ள காளி­யம்­மன் கோயில் திரு­வி­ழாவை முன்­னிட்­டு­தான் ஊர் மக்­கள் நடத்­து­கின்­ற­னர்.

பார்­வை­யா­ளர்­க­ளுக்­கான கேல­ரி­களை அமைத்­தல் உள்­ளிட்ட ஏற்­பா­டு­கள் குறித்­தும், வீரர்­க­ளுக்­கும் காளை­க­ளுக்­கும் அளிக்­கப்­ப­ட­வி­ருக்­கும் பரிசுகள் குறித்து முடி­வெ­டுக்க விழாக் குழு­வி­னர் நேற்று ஆலோ­ச­னைக் கூட்­டம் நடத்­தி­னர்.

நேற்று நடந்த இக்­கோ­யில் விழா காப்பு கட்­டும் நிகழ்ச்­சி­யில் ஊர் மக்­கள், ஜல்­லிக்­கட்டு குழு நிர்­வா­கி­கள், மாடு­பிடி வீரர்­கள், காளை உரி­மை­யா­ளர்­கள் கலந்­து­கொண்­ட­னர். கோயில் காளை­க­ளுக்கு சிறப்பு வழி­பாடு நடந்­தது.