செய்திக்கொத்து

செய்திக்கொத்து

1 mins read

2 கிலோ போதைப்­பொ­ரு­ளு­டன்

சிக்­கிய உகாண்டா நாட்­டுப் பெண்

சென்னை: சென்னை மீனம்­பாக்­கம் பன்­னாட்டு விமான நிலை­யத்­தில் பெரிய அள­வில் போதைப்­பொ­ருள் கடத்தி வரப்­ப­டு­வ­தாக கிடைத்த புகா­ரின் அடிப்­ப­டை­யில், சுங்­கத் துறை அதி­கா­ரி­கள், சென்­னை­யில் வந்­தி­றங்­கிய விமா­னப் பய­ணி­க­ளி­டம் தீவிர சோத­னையை முடுக்­கி­விட்­ட­னர். அப்­போது சந்­தே­கத்­தின் பேரில் உகாண்டா நாட்­டைச் சேர்ந்த 35 வயது பெண்­ணின் பய­ணப் பெட்­டி­களை அதி­கா­ரி­கள் சோத­னை­யிட்­ட­னர். அப்­போது அவ­ரி­டம் இருந்த அட்­டைப் பெட்டி ஒன்­றில் இருந்து 2 கிலோ 196 கிராம் 'மேத்தோ குயி­லோன்' மற்­றும் ஹெரா­யின் போதைப் பொருளை அதி­கா­ரி­கள் பறி­மு­தல் செய்­த­னர்.

38 பேருக்கு தமிழ்ச் செம்­மல் விருது

சென்னை: தமிழ் வளர்ச்­சித் துறை சார்­பில் சென்னை தலை­மைச்­செ­ய­ல­கத்­தில் நடை­பெற்ற நிகழ்­வில், 2021 ஆம் ஆண்­டிற்­கான தமிழ்ச் செம்­மல் விரு­து­களை 38 தமி­ழ­றி­ஞர்­க­ளுக்­கும், சிறந்த மொழி­பெ­யர்ப்­பா­ளர் விரு­து­களை 10 பேருக்கு முதல்­வர் ஸ்டா­லின் வழங்­கி­னார். அத்­து­டன் தமி­ழ­றி­ஞர்­க­ளான நெல்லை செ.திவான், விடு­தலை இரா­ஜேந்­தி­ரன், நா.மம்­மது ஆகி­யோ­ரின் நூல்­கள் அர­சால் நாட்­டு­டைமை ஆக்­கப்­பட்­ட­தால், ஒவ்­வொ­ரு­வ­ருக்­கும் 15 லட்­சம் ரூபாய்க்­கான காசோ­லையை முத­ல­மைச்­சர் வழங்­கி­னார். இத­னைத் தொடர்ந்து, புது­டெல்லி ஜவ­கர்­லால் நேரு பல்­க­லைக்­க­ழ­கத்­தில், தமிழ் இலக்­கி­ய­வி­யல் என்ற தனித்­துறை உரு­வாக்­கிட ரூ.5 கோடிக்­கான காசோ­லையை, ஜவ­கர்­லால் நேரு பல்­க­லைக்­க­ழ­கத் துணை வேந்­தர் பேரா­சி­ரி­யர் சாந்­திஸ்ரீ துலிப்­புடி பண்­டிட்­டி­டம் முத­ல­மைச்­சர் மு.க.ஸ்டா­லின் நேற்று வழங்­கி­னார்.