ஓபிஎஸ்ஸிடம் விளக்கம் கேட்கும் அதிமுக தலைமை

ஓபிஎஸ்ஸிடம் விளக்கம் கேட்கும் அதிமுக தலைமை

2 mins read

சென்னை: முன்­னாள் முதல்­வர் ஓ.பன்­னீர்­செல்­வம் தலை­மை­யில் அவரது ஆத­ரவு மாவட்ட செய­லாளர்­கள், நிர்­வா­கி­க­ளின் ஆலோ­சனைக் கூட்­டம் நேற்று முன்­தி­னம் நடந்­தது.

இந்­தக் கூட்­டத்­தில் வீதிக்கு வந்து தனிக்­கட்சி நடத்த தைரி­யம் இருக்­கி­றதா என்று எடப்­பாடி பழனி­ சா­மிக்கு ஓ.பன்­னீர்­செல்­வம் சவால் விடுத்­தி­ருந்­தார்.

இந்த நிலை­யில் ஓ.பன்­னீர்­செல்­வத்­துக்கு அதி­முக தலைமை அலு­வ­ல­கம், வழக்­க­றி­ஞர் எச்­ச­ரிக்கை கடி­தம் ஒன்றை அனுப்­பி­யுள்­ளது.

அதி­மு­க­வி­லி­ருந்து நீக்­கப்­பட்­டதை உயர் நீதி­மன்­றம் ஏற்­றுக்­கொண்ட நிலை­யில் ஓ.பன்­னீர் செல்­வம் தரப்­பி­னர் தொடர்ந்து கட்­சி­யின் கொடி, பெயரை பயன் படுத்தி வரு­வ­தா­கக் கூறப்­ப­டு­கிறது.

தற்­போது அதி­முக இடைக்­கால பொதுச்­செ­ய­லா­ள­ராக எடப்­பாடி பழ­னி­சா­மி­யும் பொரு­ளா­ள­ராக திண்டுக்­கல் சீனி­வா­ச­னும் உள்­ள­னர்.

அந்த வகை­யில் கட்­சி­யின் பொறுப்பு எடப்­பாடி பழ­னி­சாமி வசம் இருப்­ப­தால், ஓபி­எஸ் இதுபோன்று செயல்­ப­டு­வது குறித்து சட்­டப்­படி விளக்­கம் கேட்­கப்­பட்­டுள்­ளது.

இதற்­கி­டையே எடப்­பாடி பழ­னி­சாமி தரப்­பைச் சேர்ந்த முன்­னாள் அமைச்­சர் ஜெயக்­கு­மார், நாடா­ளு­மன்­றத் தேர்­த­லில் அ.தி.மு.க. தலை­மை­யில்­தான் கூட்­டணி அமை­யும் என்று கூறி­யுள்­ளார்.

சென்னை பெசன்ட் நக­ரில் செய்தி­யா­ளர்­க­ளுக்கு அவர் பேட்டி ­ய­ளித்­தார்.

"எடப்­பாடி பழ­னி­சாமி தலை­மை­யில் அ.தி.மு.க. இயங்கி வரு­கிறது. நாட­ளு­மன்­றத் தேர்­த­லில் அவ­ரது தலை­மை­யி­லான கூட்­ட­ணி­தான் அமை­யும். அவ­ரது தலை­மையை ஏற்­கத்­தான் எல்­லோ­ரும் வரு­வார்­கள்.

"1989, 1991ஆம் ஆண்­டு­களில் ஓபிஎஸ் யார் என்று தெரி­யாது.

1996லும் கூட அவர் யார் என்று தெரி­யாது. 2001ஆம் ஆண்­டு­தான் கட்­சி­யில் அவர் யார் என்று தெரிய வந்­தது. அதற்கு முன்பு தேனி நகரத்­தில் மட்­டும்­தான் அவரை தெரி­யும். நான் 1991ஆம் ஆண்டே அமைச்­ச­ராகிவிட்­டேன்.

"அ.தி.மு.க.வில் இருந்து நீக்­கப்­பட்ட பிறகு கட்­சிக்­கொ­டியை பயன்படுத்­து­வது தவறு," என்று தெரி­வித்­துள்­ளார்.