மக்கள், காவல்துறை குறைதீர்ப்பு நாள்; ஒரே நாளில் 2,604 மனுக்கள் மீது நடவடிக்கை

மக்கள், காவல்துறை குறைதீர்ப்பு நாள்; ஒரே நாளில் 2,604 மனுக்கள் மீது நடவடிக்கை

2 mins read

சென்னை: தமி­ழத்­தில் நேற்று ஒரே நாளில் 2,604 பேரின் குறை­கள் தீர்ப்­ப­தற்­கான நட­வ­டிக்கை எடுக்கப்­ பட்­டுள்­ளது.

புதன்­கி­ழ­மை­தோ­றும் பொது மக்­க­ளி­டம் குறை­கள் கேட்டு மனுக் கள் வாங்­கும் திட்­டம் நடை­மு­றைப் படுத்­தப்­பட்­டுள்­ளது.

அந்த வகை­யில் நேற்று முன்­தி­னம் ஒரே நாளில் தமி­ழ­கம் முழு­வ­தும் 2,604 பேரை காவல்­து­றை­ யினர் சந்­தித்து மனுக்­களை பெற்றுக்கொண்­ட­னர்.

முதல்­வர் மு.க.ஸ்டா­லின் அறி­விப்­பின்­படி வாரந்­தோ­றும் புதன் கிழமை அன்று அனைத்து காவல் ஆணை­யர்­களும் மாவட்ட காவல் சூப்­பி­ரி­டன்­டெண்­டு­களும் பொது­மக்­க­ளைச் சந்­தித்து அவர்­க­ளின் குறை­களை கேட்­ட­றிந்து மனுக்­களை வாங்க வேண்­டும் என்று டி.ஜி.பி. சைலேந்­தி­ர­பாபு உத்­த­ர­விட்­டி­ருந்­தார்.

இதன்­படி நேற்று முதல் முறை­யாக தமி­ழ­கம் முழு­வ­தும் குறை­களை கேட்டு மனுக்­களை வாங்­கும் நிகழ்வு அனைத்து காவல்­துறை ஆணை­யர் அலு­வ­ல­கங்­க­ளி­லும் மாவட்ட காவல் சூப்­பி­ரி­டன்­டெண்ட் அலு­வ­ல­கங்­க­ளி­லும் நடந்­தது.

கோவை­யில் ஐ.ஜி. சுதா­கர், டி.ஐ.ஜி. முத்­து­சாமி ஆகி­யோர் ஒரு விழா போல மக்­களை வர­வ­ழைத்து குறை­களைக் கேட்­ட­னர்.

சென்னை காவல்­துறை ஆணை­யர் சங்­கர் ஜிவா­லும் நேற்று மக்­களைச் சந்­தித்து குறை­க­ளைக் கேட்டு மனுக்­க­ளைப் பெற்று உரிய நட­வ­டிக்­கை­களை எடுக்க உத்­த­ர­விட்­டார்.

காவல்­து­றைக்­கான குறை­கள் கேட்டு மனுக்­கள் பெறும் நிகழ்ச்சி நேற்று சென்னை எழும்­பூர் ராஜ­ரத் தினம் விளை­யாட்டு அரங்­கில் நடை­பெற்­றது.

ஆணை­யர் நேர­டி­யாக வந்து கலந்­து­கொண்டு காவ­லர்களின் குறை­க­ளைக் கேட்­டார்.

டி.ஜி.பி. சைலேந்­தி­ர­பா­பு­வும் நேற்று முன்­தி­னம் தனது அலு­வ­ல­கத்­தில் பொது­மக்­கள் மற்­றும் காவல் ­து­றை­யி­ன­ரைச் சந்­தித்து குறை­களை கேட்­ட­றிந்­தார்.

தமி­ழ­கம் முழு­வ­தும் ஏறக்­கு­றைய 2,604 பேரி­டம் மனுக்­கள் பெறப்­பட்டதாகவும் உட­ன­டி­யாக அவற்றின் மீது நட­வ­டிக்கை எடுக்க உத்­த­ர­வி­டப்­பட்­ட­தாகவும் டி.ஜி.பி. அலு­வ­லகத்­தின் செய்­திக்­கு­றிப்பு தெரி­வித்­தது.