அண்ணாமலை: என் கைக்கடிகாரம் குறித்து பேசட்டும்

அண்ணாமலை: என் கைக்கடிகாரம் குறித்து பேசட்டும்

2 mins read

கோவை: தமி­ழக பார­திய ஜனதா கட்­சித் தலை­வர் அண்­ணா­மலை கட்­டி­யுள்ள கைக்­க­டி­கா­ரம் குறித்து பர­வ­லாக விமர்­சிக்­கப்­ப­டு­கிறது.

இந்த நிலை­யில், "நான் கட்டி உள்ள ரபேல் 'வாட்ச்' தொடர்­பாக பேசப்­பட்டு வரு­கிறது. என்னை பொறுத்­த­வரை இந்த கைக்கடிகாரம் குறித்து எவ்­வ­ளவு பேசு­கி­றார்­களோ அவ்­வ­ளவு நல்­ல­து எனக்கு. எனது கைக்கடிகாரம் தொடர்­பான பேச்சு அதி­க­மாக வந்த பின்­னர் கைக்கடிகாரம் குறித்த உத்­த­ர­வா­தம், அதன் தொடர்­பான எண்ணை இணை­யத்­தில் பதி­வேற்­றம் செய்­வேன் என்று அண்­ணா­மலை கூறி­யுள்­ளார். பா.ஜனதா கட்­சி­யின் கோவை தெற்கு மாவட்­டம் சார்­பில் முன்­னாள் பிர­த­மர் வாஜ்­பா­யின் 98வது பிறந்­த­நாளை முன்­னிட்டு 100 பேருக்கு காது­கேட்­கும் கருவி, செயற்கை கால்­கள் மற்­றும் நலத்­திட்ட உத­வி­கள் வழங்­கும் விழா கோவை சுந்­த­ரா­பு­ரத்­தில் உள்ள ஒரு தனி­யார் திரு­மண மண்­ட­பத்­தில் நடந்­தது. இதற்கு மாவட்ட தலை­வர் வசந்­த­ரா­ஜன் தலைமை தாங்­கி­னார்.

மாநில பொதுச்­செ­ய­லா­ளர் ஏ.பி.முரு­கா­னந்­தம் முன்­னிலை வகித்­தார். இதில் பங்­கேற்ற அண்­ணா­மலை, காது கேட்­கும் கருவி மற்றும் செயற்கை கால்­களை வழங்கி உரை நிகழ்த்­தி­னார்.

"எழு­பது ஆண்­டு­க­ளாக நாங்­கள் பொறு­மை­யாக காத்­துக்­கொண்டு இருக்­கி­றோம். அனைத்து அமைச்­சர்­களும் இது குறித்து பேச வேண்­டும். நான் இந்த 'வாட்ச்' ரசீது தொடர்­பான அனைத்­தை­யும் வெளி­யி­டும்­போது, திமு­க­வின் ஊழல் தொடர்­பாக பொது­மக்­கள் பதிவு செய்ய இணையத்தளம் மற்றும் கைபேசி செய­லி­யை­யும் அறி­மு­கப்­ப­டுத்­துவேன்.

"லஞ்­சம், ஊழல் பற்றி பேசக்­கூ­டிய தகுதி பா.ஜன­தா­வுக்கு மட்­டும்­தான் இருக்­கிறது. தி.மு.க. குடும்­பத்­தி­னர் மற்­றும் அமைச்­சர்­கள் இது குறித்து வேறு யாருக்­கும் பேச தைரி­ய­மும் இல்லை, தகு­தி­யும் இல்லை.

"ஒவ்­வொரு அமைச்­ச­ரின் சொத்துப்­ பட்­டி­ய­லை­யும் வெளி­யிடு ­வோம். அவர்­கள் தைரி­யம் இருந்­தால் பேசட்­டும்.

"அண்­ணா­மலை, தி.மு.க. குடும்­பத்­தி­னர் மற்­றும் அமைச்­சர்­க­ளின் ரூ.2 லட்­சம் கோடி சொத்து பட்­டி­யலை வெளி­யி­டு­வாரா அல்­லது ஒரு கைக்கடிகாரத்தின் ரசீதை வெளி­யிடு­ வாரா என்று எப்­போது டீக்­க­டை­யில் பேச்சு தொடங்­குதோ அப்­போது­தான் அர­சி­யல் ஆரம்­ப­மா­கும். நமக்கு வாய்ப்பு அதி­க­மாக இருக்­கிறது. அதை நாம் வாக்­காக மாற்ற அய­ராது உழைக்க வேண்­டும். நம்மை போன்று ஆர்ப்­பாட்­டம், போராட்­டங்­களை எந்த கட்­சி­யி­ன­ரும் நடத்தவில்லை.

"தமி­ழ­கத்­தில் 25 எம்.பி.க்களை பெற்று அனுப்ப வேண்­டிய கட்­டா­யத்­தில் பா.ஜனதா இருக்­கிறது. வாரிசு அர­சி­யலை முடிவு கட்ட நமக்கு வாய்ப்பு இருக்­கிறது," என்று அண்­ணா­மலை குறிப்­பிட்­டார்.