சென்னை: 'காலா பாணி' நாவலை எழுதியதற்காக எழுத்தாளர் மு.ராஜேந்திரனுக்கு சாகித்ய அகாடமி விருது அறிவிக்கப்பட்டு உள்ளது.
தமிழ், மலையாளம், கன்னடம் உள்ளிட்ட முக்கிய மொழிகளில் எழுதப்படும் சிறந்த இலக்கியம் சார்ந்த நாவல்களுக்கு ஆண்டுதோறும் இந்திய மத்திய அரசாங் கம் சாகித்ய அகாடமி விருது வழங்குகிறது. இந்த நிலையில் தமிழகத்தில் காளையார் கோவில் போரை முன்வைத்து எழுதப்பட்ட 'காலா பாணி' நாவலுக்கு இவ்வாண்டுக்கான சாகித்ய அகாடமி விருது அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாடு கூட்டுறவு சங்கத் தேர்தல் ஆணையராக பணிபுரிந்து ஓய்வு பெற்ற ஐஏஎஸ் அதிகாரி ராஜேந்திரன் இந்த நாவலை எழுதியுள்ளார்.
இதற்கு முன்னர் தமது எழுத்துப் பணிக்காக டான்சீறி சோமா விருது, புதுமைப்பித்தன் படைப்பிலக்கிய விருது உள்ளிட்ட விருதுகளை அவர் பெற்றுள்ளார்.
இந்த நிலையில் 1801ஆம் ஆண்டு ஆறு மாதங்கள் நடைபெற்ற காளையார் கோவில் போரை முன் வைத்து காலா பாணி நாவலை அவர் எழுதியுள்ளார். நாடு கடத்தப்பட்ட முதல் அரசனின் கதை என்ற இந்த நாவலில் அன்றைய கால தமிழர் களின் வாழ்க்கை, சூழல், ஆங்கி லேயர்கள் மேற்கொண்ட நடவடிக் கைகள் இடம்பெற்றுள்ளன.

