நாகர்கோவில் மாணவி தென்னிந்திய அழகியானார்

நாகர்கோவில் மாணவி தென்னிந்திய அழகியானார்

1 mins read
ab75362e-279e-4b35-ace4-a470a07eb5d0
-

நாகர்­கோ­வில்: தமி­ழ­கத்­தின் நாகர்­கோ­வில் பகு­தி­யைச் சேர்ந்த மாணவி ஒரு­வர், தென்­னிந்தி யாவின் அழ­கி­யாக தேர்வு செய்­யப்­பட்­டுள்­ளார்.

நாகர்­கோ­வில் கார்­மல் நகர் பகு­தியை சேர்ந்­த­வர் நிஷோஜா. மருத்­து­வக் கல்­லூரி மாண­வி­யான இவர், ராஜஸ்­தான் மாநி­லம் ஜெய்ப்­பூ­ரில் நடை­பெற்ற தேசிய அள­வி­லான அழ­குப் போட்­டி­யில் கலந்து கொண்­டார்.

இந்­தியா முழு­வ­தும் உள்ள அனைத்து மாநி­லங்­களில் இருந்­தும் மாநி­லத்­துக்கு ஒரு­வர் பங்­கேற்ற இந்த போட்­டி­யில் தென்­னிந்­திய அழ­கி­யாக நிஷோஜா தேர்­வா­னார்.

வெற்றி பெற்று பதக்­கங்­ களுடன் சொந்த ஊருக்கு நேற்று திரும்­பிய அவரை உற­வி­னர்­கள், பெற்­றோர், நண்­பர்­கள் உற்­சா­க­மாக வர­வேற்­ற­னர்.

மாணவி நிஷோஜா ஏற் கெனவே கன்னியாகுமரி மாவட்ட அளவில் நடைபெற்ற போட்டியில் வெற்றி பெற்று 'மிஸ் கன்னியா குமரி' பட்டத்தை வென்றுள்ளார்.

மாநில அளவில் நடைபெற்ற போட்டியில் பங்கேற்று 'மிஸ் தமிழ்நாடு' 2வது இடத்தையும் அவர் வென்றுள்ளார்.