தடுப்பூசி கையிருப்பு இல்லை; ரயில், விமான நிலையத்தில் சோதனை அச்சுறுத்தும் கொரோனா: தமிழக அரசு தயார் நிலை

தடுப்பூசி கையிருப்பு இல்லை; ரயில், விமான நிலையத்தில் சோதனை அச்சுறுத்தும் கொரோனா: தமிழக அரசு தயார் நிலை

2 mins read

சென்னை: தமிழ் நாட்­டில் உள்ள சென்னை, கோவை, திருச்சி, மதுரை ஆகிய பன்­னாட்டு விமான நிலை­யங்­களில் வந்­தி­றங்­கும் வெளி­நாட்­டுப் பய­ணி­க­ளுக்கு இன்று முதல் கொவிட்-19 பரி சோத­னை­கள் செய்­யப்­படும் என மக்­கள் நல்­வாழ்­வுத் துறை அமைச்­சர் மா.சுப்­பி­ர­ம­ணி­யன் தெரி­வித்­துள்­ளார்.

குறிப்­பாக, சீனா, ஜப்­பான், தென் கொரியா, ஹாங்­காங் உள்­ளிட்ட நாடு­களில் இருந்து வரு­ப­வர்­களுக்கு ஆர்­டி­பி­சி­ஆர் பரி­சோ­தனை செய்­யப்படும் என்­றும் அமைச்­சர் மேலும் கூறி­யுள்­ளார்.

இந்­நி­லை­யில், "தமிழகத்தில் உரு­மா­றிய புதிய வகை கொரோனா இது­வரை இல்லை என்­றா­லும் பாது­காப்­பாக இருக்கவேண்­டி­யது அவ­சி­யம்.

"கொரோனா பர­வல் குறித்து பொது­மக்­கள் தேவை­யற்ற அச்­சம் கொள்­ள­வேண்­டாம்," என முதல்­வர் மு.க.ஸ்டா­லின் கேட்­டுக்கொண்­டுள்­ளார்.

கொரோனா தடுப்­புப் பணிக்கான வழி­காட்­டு­த­லின்­படி, மக்­கள் அதி­கம் கூடும் ரயில், விமான நிலை யங்கள், உள் அரங்­கு­களில் சமூக இடை­வெ­ளி­யைக் கடைப்­பிடிக்க வேண்­டும் என்­றும் அவர் கூறினார்.

நோய்த்­தொற்று அறி­கு­றி­கள் தென்­பட்­டால் உட­ன­டி­யாக கொவிட் பரி­சோ­தனை, சிகிச்சை பெறவேண்­டும் என­வும் அவர் வலி­யு­றுத்தி உள்­ளார்.

அனைத்­து­லக விமான நிலை யங்­களில் வெளி­நா­டு­களில் இருந்து வரும் பய­ணி­கள் எவ­ருக்­கே­னும் காய்ச்­சல், இரு­மல், மூச்­சுத் திண­றல் இருந்­தால் கொவிட் பரி­சோ­தனை, சிகிச்சை அளிப்­பதை உறுதி செய்­ய­வேண்­டும் என­வும் ஸ்டா­லின் உத்­தர­விட்­டுள்­ளார்.

இத­னி­டையே, சென்­னை­யில் செய்­தி­யா­ளர்­களை நேற்று சந்­தித்­துப் பேசிய அமைச்சர் மா.சுப்­பி­ர­மணி­யன், "வெளி­நாட்­டுப் பய­ணி­களுக்குத் தமி­ழக விமா­ன நிலை யங்களில் இன்று முதல் ஆர்­டி­பி­சி­ஆர் கொரோனா பரி­சோ­தனை நடத்­தப்­படும்," என்­றார்.

தொடர்ந்து பேசிய அவர், மருத் துவ நிறு­வ­னங்­கள் தடுப்­பூசி தயா­ரிப்­பதை நிறுத்தி உள்­ள­தால் தமி­ழ­கத்­தில் கொரோனா தடுப்­பூ­சி­ கையி­ருப்பில் இல்லை என்­றும் கூறி­னார்.

முன்­ன­தாக தூத்­துக்­குடி விமான நிலை­யத்­தில் செய்­தி­யா­ளர்­க­ளி­டம் பேசி­ய­ அவர், தமிழகத்தில் ஒரே பகு­தி­யில் மூவருக்கு மேல் இத்தொற்றுக்கான அறிகுறிகள் இருந்தால், அப்பகுதியில் வசிக்­கும் அனைவ­ருக்­கும் பரி­சோ­தனை நடத்த முடிவு செய்­யப்­பட்­டுள்­ளது என்றும் மா.சுப்­பி­ர­மணி­யன் தெரி­வித்­துள்­ளார்.