கோவை: வேலியே பயிரை மேய்ந்தது போல மக்களுக்குப் பாதுகாப்பு வழங்கவேண்டிய காவலர் ஒருவர், ஐந்து தொலைக்காட்சிப் பெட்டிகள், கியாஸ் அடுப்பு, ரூ.47,000 ரொக்கப்பணம் ஆகிய வற்றைத் திருடிச்சென்றுள்ளார்.
சம்பந்தப்பட்டவர்களின் புகாரைத் தொடர்ந்து காவலரும் இந்தக் குற்றச்செயலுக்கு உடந்தையாக இருந்த அவரது நண்பரும் கைது செய்யப்பட்டனர்.
உத்தரப் பிரதேச மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் தாசிம், 27, சாருக், 30. இவர்கள் இருவரும் கோவை சிங்காநல்லூர் அருகே உள்ள வரதராஜபுரத்தில் தங்கியிருந்தபடி தொலைக்காட்சிப் பெட்டிகள், கியாஸ் அடுப்புகளை வீடுவீடாகச் சென்று வியாபாரம் செய்து வந்துள்ளனர்.
இதேபோல், கடந்த 20ஆம் தேதி தாசிமும் சாருக்கும் கண்ணம் பாளையம் பகுதியில் தொலைக் காட்சிப் பெட்டிகளை விற்பனை செய்ய எடுத்துச் சென்றுள்ளனர்.
அப்போது, அங்கு வந்த சூலூர் காவல்நிலையக் காவலர் முருக னும், 34, அவரது நண்பர் பிரதீஷும், 27, வியாபாரிகளைத் தடுத்து நிறுத்தினர்.
"இவை திருட்டு தொலைக்காட் சிப் பெட்டிகள் தானே? இவற்றை எங்கு கொண்டு செல்கிறீர்கள்? சந்தேகம் உள்ளதால் உங்களை விசாரிக்க வேண்டும்," என வியாபாரிகள் இருவரையும் அந்தப் பகுதியில் உள்ள வாகனங்கள் பழுதுபார்க்கும் கடைக்குள் அழைத்துச்சென்று கட்டிப்போட்டு தாக்கினர்.
அதன்பிறகு, காவலர் முருகனும் பிரதீஷும் வியாபாரிகள் தங்கி இருக்கும் வரதராஜபுரம் வீட்டுக்கு வந்து, அங்கு விற்பனைக்காக வைக்கப்பட்டு இருந்த தொலைக் காட்சிப் பெட்டிகள், கியாஸ் அடுப்பு, ரூ.47,000 பணம் ஆகியவற்றை கைப்பற்றி தப்பிச்சென்றனர்.
இதுகுறித்து தாசிம், சிங்காநல்லூர் காவல்நிலையத்தில் புகார் செய்ததை அடுத்து காவலர் முருகன், பிரதீஷ் கைதாகினர்.

