சென்னை: ஜெயலலிதா மரணத்திலும் அவருக்கு அளிக்கப்பட்ட சிகிச்சையிலும் மறைப்பதற்கு ஒன்றுமில்லை என மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் தோழி சசிகலா கூறியுள்ளார்.
"மேல் சிகிச்சை பெறுவதற்காக வெளிநாடு செல்வதற்கு தனக்கு விருப்பமில்லை என மருத்துவர்களிடம் கூறியதும் ஜெயலலிதாதான். ஜெயலலிதாவுக்கு எய்ம்ஸ், மாநில மருத்துவர்கள் சிகிச்சை அளித்தனர். விரைவில் குணமாகி வீடு திரும்புவோம் என்ற எண்ணத் தில் மருத்துவர்களுக்கு பரிசுப் பொருள்கள் வழங்கவும் ஜெயலலிதா தயாராக இருந்தார்," என்றும் சசி கலா தெரிவித்துள்ளார்.

