கோடநாடு கொலை: கைப்பேசி கோபுர தகவல்கள் சேகரிப்பு

கோடநாடு கொலை: கைப்பேசி கோபுர தகவல்கள் சேகரிப்பு

2 mins read

நீல­கிரி: கோட­நாடு கொலை, கொள்ளை வழக்கு விசா­ரணை மேலும் தீவி­ர­ம­டைந்­துள்­ளது. அப்­பகு­தி­யில் அமைந்­துள்ள கைப்­பேசி கோபு­ரத்­தின் மூலம் பதி­வான தக­வல்­களை மீட்­டெ­டுக்­கும் முயற்­சி­யில் காவல்­துறை ஈடு­பட்­டுள்­ளது.

காலஞ்­சென்ற முதல்­வர் ஜெய­லலி­தா­வுக்குச் சொந்­த­மான பங்களா கோட­நாடு பகு­தி­யில் அமைந்­துள்­ளது. ஆண்­டு­தோ­றும் அங்கு சென்று ஓய்­வெ­டுப்­பது ஜெய­ல­லி­தா­வின் வழக்­க­மாக இருந்து வந்­தது.

கடந்த 2016ஆம் ஆண்டு அவர் கால­மான பிறகு அந்­தப் பங்­க­ளா­வில் கொலை, கொள்­ளைச் சம்­ப­வங்­கள் நிகழ்ந்­தன. அந்­தப் பங்­க­ளா­வில் சில முக்­கிய ஆவ­ணங்­கள், பொருள்­களை சிலர் கொள்­ளை­ய­டித்­துச் சென்­ற­தா­கக் கூறப்­ப­டு­கிறது.

ஜெய­ல­லி­தா­வின் தோழி சசிகலா சிறைத்­தண்­டனை முடிந்து விடுதலை­யா­வ­தற்­குள் அந்த ஆவ­ணங்­களைக் கைப்­பற்ற வேண்­டும் என்ற நோக்­கத்­து­டன் சில முக்­கியப் பிரமு­கர்­கள் செயல்­பட்­ட­தா­க­வும் அது தொடர்­பான ஆதா­ரங்­களை காவல்­து­றை­யின் சிறப்­புப் படை சேக­ரித்து வரு­வ­தா­க­வும் ஊட­கங்­களில் அவ்­வப்­போது பர­ப­ரப்­புத் தக­வல்­கள் வெளி­யான வண்­ணம் உள்­ளன.

ஜெய­ல­லி­தா­வின் முன்­னாள் கார் ஓட்­டு­ந­ரான கன­க­ராஜ் ஏற்­பாட்­டில், கேர­ளா­வைச் சேர்ந்த கூலிப்­ப­டை­யி­னர் கொலை, கொள்­ளைச் சம்­ப­வத்­தில் ஈடு­பட்­ட­தா­க­வும் இது­கு­றித்து கூலிப்­படை தலை­வன் சயான் காவல்­து­றை­யி­டம் பல முக்­கி­ய­மான தக­வல்­க­ளைக் கூறி­யி­ருப்­ப­தா­க­வும் தெரி­கிறது.

இந்­நி­லை­யில், கோட­நாடு பகுதி­யில் உள்ள கைப்­பேசி கோபு­ரங்­கள் மூலம் பதி­வான பல்­வேறு உரை­யா­டல்­கள், தக­வல்­களை சிலர் அழித்­தி­ருப்­பது தெரி­ய­வந்­துள்­ளது. அழிக்­கப்­பட்ட அந்த முக்­கிய தக­வல்­களை மீட்­டெ­டுக்க காவல்­து­றை­யின் சைபர் கிரைம் பிரிவு அதி­கா­ரி­கள் தீவிர முயற்­சி­களை மேற்­கொண்டு வரு­கின்­ற­னர்.

"நவீன தொழில்­நுட்­பத்­தின் உதவியுடன் சில தக­வல்­களை மீட்­டுள்­ளோம். மேலும், சிபி­சி­ஐடி மேற்­கொண்ட நட­வ­டிக்­கை­க­ளின்­போ­தும் சில விவ­ரங்­கள் சேக­ரிக்­கப்­பட்­டுள்­ளன. எனவே, கோட­நாடு வழக்கு விசா­ரணை தீவி­ர­ம­டைந்­துள்­ளது. அடுத்த மூன்று மாதங்­களுக்­குள் விசா­ரணை முடி­வுக்கு வரும்," என காவல்­துறை தரப்­பில் கூறப்­ப­டு­வ­தாக தமி­ழக ஊட­கம் செய்தி வெளி­யிட்­டுள்­ளது.

கூலிப்­ப­டைத் தலை­வன் சயான் அளித்­துள்ள தக­வல்­கள், மீட்­டெடுக்­கப்­படும் கைப்­பேசி கோபு­ரத் தக­வல்­க­ளின் அடிப்­ப­டை­யில் சில முக்­கி­யப் பிர­மு­கர்­கள் கைதாக வாய்ப்­புள்­ள­தா­கக் கூறப்­ப­டு­கிறது.