போதையில் மாணவிகளுக்குத் தொல்லை; பள்ளி ஆசிரியருக்கு தர்ம அடி, கைது

போதையில் மாணவிகளுக்குத் தொல்லை; பள்ளி ஆசிரியருக்கு தர்ம அடி, கைது

2 mins read

சேலம்: அர­சுப் பள்­ளி­யில் மது போதை­யில் மாண­வி­க­ளுக்குத் தொல்லை கொடுத்து வந்த ஆசி­ரி­யர் சேலம் காவல்­து­றை­யி­ன­ரால் கைது செய்­யப்­பட்­டார்.

மேலும், மாண­வி­க­ளின் பெற்­றோர் பள்­ளிக்­குத் திரண்டு வந்து அந்த ஆசி­ரி­ய­ருக்கு தர்ம அடி கொடுத்­த­னர்.

சேலம் மாவட்­டம், சேலத்­தாம்­பட்­டி­யில் இயங்கி வரும் ஊராட்சி ஒன்­றிய நடு­நி­லைப்­பள்­ளி­யில் சுரேஷ்­பாபு (வயது 48) என்­ப­வர் ஐந்­தாம் வகுப்பு ஆசி­ரி­ய­ரா­கப் பணி­யாற்றி வரு­கி­றார்.

இவர் மது அருந்திவிட்டு பள்ளிக்கு வரு­வ­தா­க­வும் மாண­வி­க­ளுக்குத் தொல்லை கொடுப்­ப­தா­க­வும் பல்­வேறு புகார்­கள் எழுந்து வந்­தன. எனி­னும் பள்­ளி­யின் தலைமை ஆசி­ரி­யர் உரிய நட­வ­டிக்கை எடுக்­க­வில்லை எனக் கூறப்­ப­டு­கிறது.

மாண­வி­க­ளின் கழிப்­பறை அரு­கில் நின்று புகை பிடிப்­பது, கை, கால்­களைப் பிடித்­து­வி­டச் சொல்­வது என ஆசி­ரி­யர் சுரேஷ்­பா­பு­வின் செயல்­கள் அத்­து­மீ­றி­ய­தாக இருந்­துள்­ளன. மேலும் மாண­வி­க­ளி­டம், பள்­ளி­யில் நடப்­பதை வீட்­டில் சொல்­லக்­கூ­டாது என்று மிரட்­ட­லும் விடுத்­துள்­ளார்.

இந்­நி­லை­யில் நேற்று முன்­தி­னம் ஆசி­ரி­யர் சுரேஷ்­பாபு மது­போ­தை­யில் பள்­ளிக்கு வந்­துள்­ளார். இதை எப்­ப­டியோ தெரிந்­து­கொண்ட மாண­வி­க­ளின் பெற்­றோர் பலர் பள்ளிக்குத் திரண்டு வந்­த­னர்.

இதை­ய­டுத்து அவ­ரி­டம் பெற்­றோர் பலர் சர­மாரி கேள்­வி­களை எழுப்­பி­னர். அதற்­குப் பதி­ல­ளிக்க முடி­யாத ஆசி­ரி­யர் சுரேஷ்­பா­புவை சிலர் தாக்­கி­ய­தா­கத் தெரி­கிறது.

பெற்­றோர் சிலர் பள்­ளியை முற்­று­கை­யிட்டு போராட்­டத்­தில் ஈடு­பட்­ட­தால் அந்­தப் பகு­தி­யில் பர­ப­ரப்பு ஏற்­பட்­டது.

தக­வல் அறிந்து விரைந்து வந்த காவல்­து­றை­யி­னர் பெற்­றோரை சமா­தா­னப்­ப­டுத்­தி­னர். உரிய நட­வ­டிக்கை எடுக்­கப்­படும் என்­றும் உறு­தி­ய­ளித்­த­னர்.

இதை­ய­டுத்து பள்ளி ஆசி­ரி­யர்­கள், பாதிக்­கப்­பட்ட மாண­வி­க­ளி­டம் காவல்­துறை அதி­கா­ரி­கள் விசா­ரணை மேற்­கொண்­ட­னர். அப்­போது குற்­றம் சாட்­டப்­பட்­டுள்ள சுரேஷ்­பாபு மது போதை­யில் இருந்­தது தெரி­ய­வந்­தது.

அதன் முடி­வில் ஆசி­ரி­யர் சுரேஷ்­பாபு மீதான புகார்­கள் அனைத்­தும் உண்மை எனத் தெரி­ய­வந்­ததை அடுத்து அவர் உட­ன­டி­யாக போக்சோ சட்­டத்­தின் கீழ் கைதா­னார்.

அவர் மீது பல்­வேறு பிரி­வு­க­ளின் கீழ் வழக்­குப் பதி­வாகி உள்­ள­தாக காவல்­துறை தெரி­வித்­துள்­ளது. சுரேஷ்­பாபு ஆசி­ரி­ய­ராகப் பணி­யாற்றி வரும் இதே பள்­ளி­யில் அவ­ரு­டைய மனை­வி­யும் ஆசி­ரி­யை­யா­கப் பணி­யாற்றி வரு­கி­றார்.

சுரேஷ்­பா­பு­வுக்கு உரிய தண்­டனை பெற்­றுத் தர வேண்­டும் என அப்­ப­குதி மக்­கள் வலி­யு­றுத்தி உள்­ள­னர்.

அவ­ரி­டம் மேலும் விசா­ரணை நடத்­தப்­படும் என காவல்­துறை தெரி­வித்­துள்­ளது.