விரிவாக்கப் பணிகளுக்குப் பிறகு சென்னை விமான நிலையத்தில் நான்கு முனையங்கள்

விரிவாக்கப் பணிகளுக்குப் பிறகு சென்னை விமான நிலையத்தில் நான்கு முனையங்கள்

2 mins read

சென்னை: மீனம்­பாக்­கம் அனைத்­து­லக விமான நிலைய விரி­வாக்கப் பணிக்­காக இந்­திய விமான நிலைய இயக்­கு­ன­ர­கம் சுமார் ரூ.2,467 கோடி ஒதுக்கி உள்­ளது என்று அதி­கா­ரி­கள் தெரி­வித்­துள்­ள­னர்.

இது தொடர்­பாக 95 விழுக்­காடு பணி­கள் முடி­வ­டைந்து விட்­ட­தா­க­வும், மிக விரை­வில் விரி­வாக்­கம் செய்­யப்­பட்ட பகு­தி­கள் பய­ணி­கள் பயன்­பாட்­டுக்­கா­கத் திறக்­கப்­படும் என்­றும் தெரி­விக்­கப்­பட்­டுள்­ளது.

சென்னை விமான நிலை­யத்­தில் உள்­நாட்டு விமான நிலை­யம், வெளி­நாட்டு விமான நிலை­யம் என 2 முனை­யங்­கள் செயல்­பட்டு வரு­கின்­றன.

இந்­நி­லை­யில் மீனம்­பாக்­கம் விமான நிலை­யத்தை அனைத்­து­லகத் தரம் வாய்ந்­த­தாக மாற்ற நட­வ­டிக்கை மேற்­கொள்­ளப்­பட்டு வரு­கிறது.

சென்னை விமான நிலை­யத்­தில் 2025ஆம் ஆண்டு ஒருங்­கி­ணைந்த விமான முனை­யம் திறக்­கப்­ப­டும்­போது, அதில் 33 தானி­யங்கி நுழை­வா­யில்­கள், 20 ஏரோ-பிரிட்ஜ்­கள் செயல்­படும் என்று குறிப்­பிட்­டுள்ள அதி­கா­ரி­கள், விமான நிலை­ய எல்­லையை ஒட்­டி­யுள்ள நிலங்­களைக் கைய­கப்­படுத்­து­வ­தில் உள்ள சிக்­கல்­க­ளால் விரி­வாக்­கப் பணி­களில் தாம­தம் ஏற்­பட்­டுள்­ள­தா­கத் தெரி­வித்­துள்­ள­னர்.

"மேலும் கொரோனா நெருக்­க­டி­யா­லும் பணி­கள் தாம­த­ம­டைந்­துள்­ளன. கடந்த இரண்டு ஆண்­டு­களாகப் பெய்த தொடர் மழை­யின் கார­ண­மா­க­வும் இந்­தப் பணி­க­ளைச் சரி­யாக செய்து முடிக்க முடி­ய­வில்லை.

"எதிர்­வ­ரும் 2025ஆம் ஆண்­டுக்­குள் இந்த பணி­கள் முழு­வ­தும் முடிக்­கப்­பட்டு ஆண்­டுக்கு மூன்­றரை கோடி பய­ணி­களை கையா­ளும் வகை­யில் ஒருங்­கி­ணைந்த சென்னை விமான நிலை­யம் செயல்­படும்," என அதி­கா­ரி­கள் மேலும் கூறி­யுள்­ள­னர்.

தற்­போது மேற்­கொள்­ளப்­பட்டு வரும் விரி­வாக்­கப் பணி­க­ளுக்­குப் பின்­னர் சென்னை விமான நிலை­யத்­தில் நான்கு முனை­யங்­கள் செயல்­படும் எனத் தெரி­ய­வந்­துள்­ளது.

அவற்­றுள் இரண்டு முனை­யங்­கள் உள்­நாட்டு விமான நிலை­ய­மா­க­வும் மீத­முள்ள இரண்டு முனை­யங்­கள் அனைத்­து­லகப் பய­ணி­களுக்­கா­க­வும் செயல்­படும் என்­றும் அதி­கா­ரி­கள் தெரி­வித்­துள்­ள­னர்.