தமிழகத்தில் 18ஆவது சுனாமி நினைவு தினம் அனுசரிப்பு

தமிழகத்தில் 18ஆவது சுனாமி நினைவு தினம் அனுசரிப்பு

1 mins read
4ffb8e72-cd1f-4bc5-9029-210607869ba1
-

சென்னை: தமி­ழ­கத்­தில் 18ஆவது சுனாமி தினம் நேற்று அனு­ச­ரிக்­கப்­பட்­டது.

கடந்த 2004ஆம் ஆண்டு சுனாமி தாக்­கு­த­லுக்கு உல­கம் முழு­வ­தும் ஆயி­ரக்­க­ணக்­கா­னோர் பலி­யா­கி­னர். தமி­ழ­கத்­தை­யும் அது விட்­டு­வைக்­க­வில்லை.

தமி­ழ­கத் தலை­ந­கர் சென்னை முதல் குமரி வரை உள்ள கட­லோ­ரப் பகு­தி­களில் பத்­தா­யி­ரத்­துக்­கும் மேற்­பட்­டோர் பலி­யா­கி­னர்.

குறிப்­பாக, ஆக அதி­க­மாக நாகப்­பட்­டி­னத்­தில் ஆறா­யி­ரம் பேரும் கட­லூ­ரில் 610 பேரும் சென்­னை­யில் இரு­நூற்­றுக்­கும் மேற்­பட்­ட­வர்­களும் மாண்­டு­விட்­ட­னர். பல்­லா­யி­ரம் கோடி ரூபாய் மதிப்­புள்ள பொருள்­சே­த­மும் ஏற்­பட்­டது.

இந்­நி­லை­யில், சுனாமி தாக்­கத்­தால் உயி­ரி­ழந்­த­வர்­க­ளின் நினைவு தினம் நேற்று தமி­ழ­கம் முழு­வ­தும் அனு­ச­ரிக்­கப்­பட்­டது.

இதை­ய­டுத்து, கட­லோ­ரப் பகு­தி­களில் திரண்ட ஏரா­ள­மா­னோர் இறந்­த­வர்­க­ளின் நினை­வாக கட­லில் பால் ஊற்றி, பூக்­க­ளைத் தூவி அஞ்­சலி செலுத்­தி­னர்.

பல்­வேறு அமைப்­பு­கள் நினைவு தினத்­தை­யொட்டி அஞ்­சலி செலுத்­தும் நிகழ்­வு­க­ளுக்கு ஏற்­பாடு செய்­தி­ருந்­தன. குழந்­தை­கள், குடும்­பத்­தார், நண்­பர்­களை இழந்த­வர்­கள் கண்­ணீர் மல்க அஞ்சலி செலுத்­திய காட்சி நெஞ்சை உருக்கு­வ­தாக இருந்­தது.