கோடநாட்டில் உயர்மட்ட அதிகாரிகள் ரகசிய விசாரணை

கோடநாட்டில் உயர்மட்ட அதிகாரிகள் ரகசிய விசாரணை

2 mins read

நீல­கிரி: கோட­நாடு கொலை, கொள்ளை வழக்கு தொடர்­பாக தமி­ழக காவல்­து­றை­யின் சிபிசிஐடி பிரி­வின் கூடு­தல் டிஜிபி அபய்­கு­மார் சிங், ரக­சிய விசா­ரணை மேற்கொண்டு வரு­வ­தாக வெளி­யான தக­வல் அதி­முக வட்­டா­ரங்­களில் பர­ப­ரப்பை ஏற்­ப­டுத்தி உள்­ளது.

அண்­மை­யில் கோட­நாடு சென்ற அவர், இவ்­வ­ழக்­கு­டன் தொடர்­பு­டை­ய­வர்­க­ளி­டம் நேர­டி­யாக விசா­ரணை நடத்­தி­ய­தா­கக் கூறப்­ப­டு­கிறது.

காலஞ்­சென்ற முதல்­வர் ஜெய­லலி­தா­வுக்குச் சொந்­த­மான எஸ்­டேட் கோட­நாடு பகு­தி­யில் உள்­ளது. அவ­ரது மறை­வுக்­குப் பிறகு அங்­குள்ள பங்­க­ளா­வில் இருந்து சில முக்­கிய ஆவ­ணங்­கள், பொருள்­கள் கொள்­ளை­ய­டிக்­கப்­பட்­டன. மேலும், அந்­தப் பங்­க­ளா­வின் பாது­கா­வ­லர் ஓம்­ப­க­தூர் என்­ப­வர் கொலை செய்­யப்­பட்­டார்.

கடந்த அதி­முக ஆட்­சிக் காலத்­தில் இந்த வழக்­கு­கள் தொடர்­பான விசா­ரணை சரி­வர நடை­பெ­ற­வில்லை என திமுக உள்­ளிட்ட எதிர்க்­கட்­சி­கள் சாடின.

இதை­ய­டுத்து, திமுக ஆட்சி அமைந்­த­தும் வழக்கு விசா­ரணை தீவி­ர­ம­டைந்­தது. பின்­னர் சிபி­சி­ஐடி விசா­ர­ணைக்கு உத்­த­ர­வி­டப்­பட்டது.

கொலை, கொள்ளை வழக்­கில் ஜெய­ல­லி­தா­வின் முன்­னாள் கார் ஓட்­டு­நர் கன­க­ராஜுக்கும் கேரளாவைச் சேர்ந்த கூலிப்­படைக்கும் தொடர்பு இருப்­பதாக கூறப்பட்டது. கூலிப்படைத் தலை­வன் சயான் கைது செய்­யப்­பட்­டான்.

இவ்வழக்­குடன் தொடர்புள்ள­தாகக் கரு­தப்­பட்­ட­வர்­களும் விசா­ரிக்­கப்­பட்­ட­வர்­களும் திடீரென அடுத்­த­டுத்து உயி­ரி­ழந்­த­னர். எனினும் கொலை, கொள்­ளைக்­கான உண்­மைக் கார­ணம் குறித்து உறு­தி­யான தக­வல்­கள் கிடைக்­க­வில்லை.

இந்­நி­லை­யில், வழக்கை விசா­ரித்து வரும் சிபி­சி­ஐடி பிரி­வின் கூடு­தல் டிஜிபி அபய்­கு­மார் சிங் அண்­மை­யில் கோட­நாடு சென்று அங்கு இரு நாள்­கள் முகா­மிட்டு விசா­ரணை நடத்தி உள்­ளார்.

அவ­ரது இந்த வருகை குறித்து அங்­குள்ள அதி­கா­ரி­க­ளுக்கு முன்­கூட்­டியே தக­வல் ஏதும் தெரி­விக்­கப்­ப­ட­வில்லை எனத் தெரி­கிறது. மேலும், சிபி­சி­ஐடி பிரிவு ஐஜி தேன்­மொ­ழி­யும் கோட­நாட்­டில் பத்து நாள்­கள் தங்கி இருந்­த­தா­க­வும் ஏற்­கெ­னவே பணி­யில் உள்ள விசா­ரணை அதி­கா­ரி­க­ளி­டம் இருந்து அவர் விரி­வான விசா­ரணை அறிக்­கை­யைக் கேட்­டுப் பெற்­றுள்­ள­தா­க­வும் ஊட­கச் செய்­தி­யில் குறிப்­பி­டப்­பட்­டுள்­ளது.

இவ்­வ­ழக்­கு­களை விசா­ரிக்கும் தனிப்­ப­டை­யில் மேலும் 34 அதிகாரி­கள் இணைக்­கப்­பட்­டுள்­ள­னர். இதை­ய­டுத்து கோட­நாடு வழக்கு விசா­ரணை துரித கதி­யில் நடை­பெற்று வரு­வ­தா­க­வும் விரை­வில் குற்­ற­வா­ளி­கள் சிக்­கு­வார்­கள் என்­றும் காவல்­துறை தரப்­பில் கூறப்­ப­டு­கிறது.