மு.க.ஸ்டாலின்: வரலாற்றுத் திரிபுதான் முக்கிய ஆபத்து

மு.க.ஸ்டாலின்: வரலாற்றுத் திரிபுதான் முக்கிய ஆபத்து

2 mins read
17d94b30-6c7c-4637-9266-a10fbc798470
-

'சிலரது கற்பனைக் கதைகளை அறிவுமிக்க சமுதாயம் ஏற்றுக்கொள்ளாது'

சென்னை: கற்­ப­னைக் கதை­களை சிலர் வர­லா­றாக சொல்­லிக் கொண்டு இருக்­கி­றார்­கள் என்­றும் அதை நம்பி ஏமாந்­து­வி­டக்­கூ­டாது என்­றும் முதல்­வர் மு.க.ஸ்டா­லின் (படம்) கூறி­யுள்­ளார்.

கற்­ப­னைக் கதை­களை ஏற்கக்­கூடாது என்­றும் அறி­வு­மிக்க சமு­தா­யம் அவற்றை ஏற்­றுக்கொள்­ளாது என்­றும் சென்­னை­யில் தனி­யார் கல்­லூ­ரி­யில் நடை­பெற்ற இந்­திய வர­லாற்று காங்­கி­ரஸ் மாநாட்டைத் தொடங்கி வைத்து பேசி­ய­போது அவர் குறிப்­பிட்­டார்.

"வர­லாற்­றுத் திரி­பு­தான் நாட்­டைச் சூழ்ந்­துள்ள ஆபத்து. எனவே பொய் வர­லா­று­க­ளைப் புறந்­தள்ளி மக்­களை மையப்­ப­டுத்­திய உண்­மை­யான வர­லாறு எழு­தப்­பட வேண்­டும்.

"வர­லாற்று உணர்வை ஊட்டு­தல், அறி­வி­யல் பார்­வையை உரு­வாக்­கு­தல் ஆகி­ய­வை­தான் இன்­றைய காலத்­தின் தேவை. வரலாற்­றைப் படித்து என்ன ஆகப் போகிறது, அதைப் படித்­தால் வேலை கிடைக்­குமா, நல்ல ஊதி­யம் கிடைக்­குமா? என்­ப­து­தான் பல­ரு­டைய எண்­ண­மாக இருக்­கிறது. வர­லாறு என்­பது வேலைக்­காக, படிப்­புக்­காக, பட்­டத்­திற்­காக, ஊதி­யத்­துக்­காக மட்­டும் அல்ல, நம்மை நாமே அறிந்து கொள்­வ­தற்­கா­க­வும் வர­லாற்­றைப் படித்­தாக வேண்­டும்," என்­றார் முதல்­வர் மு.க.ஸ்டாலின்.

கடந்த கால வர­லாற்றைப் படிப்­ப­வர்­க­ளால் மட்­டும்­தான் நிகழ்­கால வர­லாற்­றைப் படைக்க முடி­யும் என்­றும் எதிர்­கா­லத்தைக் கணிக்க முடி­யும் என்­றும் குறிப்­பிட்ட அவர், அவ்­வாறு படிக்கப்­படும் வர­லாறு, அறி­வியல் ­பூர்­வ­மான உண்­மை­யான வகை­யில் அமைந்­திட வேண்டும் என வலி­யு­றுத்­தி­னார்.

கல்வி, மொழி, பண்­பாடு, அதி­கா­ரம், பொரு­ளா­தா­ரம், நிர்­வா­கம் அனைத்­தி­லும், இந்­திய அர­சி­ய­ல­மைப்­புச் சட்­டத்­தின் மாண்­பு­கள் காப்­பாற்­றப்­பட வேண்­டும் என்று கூறிய அவர், மதச்­சார்­பின்மை என்­பது, இந்­திய அர­சி­ய­ல­மைப்­புச் சட்­டத்­தின் அடிப்­ப­டைத் தன்மை என்­றார்.

"தமிழ்­நாடு தொன்­மை­யான வர­லாறு கொண்ட நிலப்­ப­ரப்பு. நாங்கள் பழம்­பெ­ரு­மை­கள் மீது பற்றுக் கொண்­ட­வர்­கள்­தான். ஆனால் பழமை­வா­தி­கள் அல்ல.

"அறி­வி­யல்­பூர்­வ­மான ஆதா­ரங்­களின் அடிப்­ப­டை­யில்­தான் எங்­கள் வர­லாற்­றுப் பெரு­மை­க­ளைப் பேசுகி­றோம். கீழடி, அழ­கன்­கு­ளம், கொற்கை, சிவ­களை, ஆதிச்­ச­நல்­லூர், கொடு­ம­ணல், மயி­லா­டும்­பாறை, கங்­கை­கொண்ட சோழ­பு­ரம் ஆகிய இடங்­களில் விரி­வான ஆய்­வு­களை தமிழ்­நாடு அரசு தொடங்கி இருக்­கிறது," என்­றார் முதல்­வர் ஸ்டா­லின்.

தமிழ்­நாட்­டில் கிமு ஆறாம் நூற்­றாண்­டி­லேயே, நக­ர­ம­ய­மாக்­கம் ஏற்­பட்­டி­ருந்­தது என்­பது மட்­டு­மல்­லா­மல், எழுத்­த­றிவு மேம்­பட்ட சமூ­க­மாக விளங்­கி­யதை கீழடி அக­ழாய்வு நிலை­நி­றுத்­தி­யுள்­ளது என்­றார் அவர்.

சிவ­க­ளை­யில் முது­மக்­கள் தாழி­யில் கண்­டெ­டுக்­கப்­பட்ட, உமி நீங்­கிய நெல்­ம­ணி­க­ளின் காலம், கி.மு. 1,150 எனக் கண்­ட­றி­யப்­பட்­டுள்­ளது.

'தண் பொருநை' என்று அழைக்­கப்­பட்ட, தாமி­ர­ப­ரணி ஆற்­றங்­கரை நாக­ரி­கம், மூவா­யி­ரத்து இரு­நூறு ஆண்­டு­க­ளுக்கு முற்­பட்­டது என்­பது, அறி­வி­யல்­பூர்வ ஆய்­வு­க­ளின் அடிப்­ப­டை­யில் உறுதி செய்­யப்­பட்­டுள்­ளது," என்று முதல்­வர் மு.க.ஸ்டா­லின் சுட்­டிக்­காட்­டி­னார்.

"இந்­திய துணைக்­கண்­டத்­தின் வர­லாறு பழந்­த­மி­ழக நிலப்­ப­ரப்­பில் தொடங்கி எழு­தப்­ப­டு­வ­து­தான் முறை­யாக இருக்­கும் என்று நாங்­கள் கரு­து­கி­றோம்.

"அது வர­லாற்று அர­சர்­கள், அவர்­களின் வாழ்க்கை முறை, வெற்றிகளைப் பிரதிபலிக்கும் ஆவ­ண­மாக மட்­டும் இருக்­கக்கூடாது. அது அனைத்து தரப்பு மக்­க­ளை­யும் பிர­தி­ப­லிப்­பதாக இருக்க வேண்­டும்," என்­றார் முதல்வர் மு.க.ஸ்டா­லின்.