தமிழகத்தில் வசிக்கும் அனைவருக்கும் 'மக்கள் அடையாள அட்டை' வழங்க தமிழக அரசு முடிவு

தமிழகத்தில் வசிக்கும் அனைவருக்கும் 'மக்கள் அடையாள அட்டை' வழங்க தமிழக அரசு முடிவு

2 mins read

சென்னை: மத்­திய அரசு வழங்­கும் 'ஆதார்' அட்டை போன்று தமி­ழக அர­சும் 'மக்­கள் ஐடி' எனப்­படும் அடை­யாள அட்­டையை வழங்க முடிவு செய்­துள்­ள­தாக 'தமிழ் இந்து' ஊட­கம் செய்தி வெளி­யிட்­டுள்­ளது.

'ஆதார்' அட்­டை­யில் உள்­ளது போன்று 'மக்­கள் அடை­யாள' அட்­டை­யி­லும் பத்து முதல் 12 இலக்க எண் இடம்­பெற்­றி­ருக்­கும் எனக் கூறப்­ப­டு­கிறது.

தமி­ழ­கத்­தில் வசிக்­கும் அனைத்து குடும்­பங்­க­ளின் தரவு­களை­யும் சேகரித்து, மாநில அள­வில் குடும்­பத் தரவு தளத்தை உரு­வாக்க தமி­ழக அரசு உரு­வாக்­க திட்­ட­மிட்­டுள்­ளது.

இதற்­கான நட­வ­டிக்­கை­களை மாநில தொழில்­நுட்­பம், மின்­னி­லக்­கச் சேவை­கள் துறை­யின் கீழ் இயங்கி வரும் தமிழ்­நாடு மின் ஆளுமை முகமை மேற்­கொள்­ளும் எனத் தெரிய வந்­துள்­ளது.

பொது விநி­யோ­கத் துறை, வரு­வாய்த் துறை, சமூக நலத்­துறை உள்­பட பல்­வேறு துறை­கள் தனித்­த­னி­யாகச் சேக­ரித்து அளிக்­கும் தர­வு­கள் அனைத்­தை­யும் ஒரு­முகப்­ப­டுத்தி, மக்­கள் அட்­டைக்­கான இறு­திக்­கட்ட தர­வு­கள் வகைப்­படுத்­தப்­படும் என அரசு வட்­டா­ரங்­கள் தெரி­விக்­கின்­றன.

தமி­ழ­கத்­தில் வசிக்­கும் அனை­வ­ருக்­கும் மக்­கள் அட்­டையை விநி­யோ­கிப்­ப­தன் மூலம் அர­சாங்­கம் வழங்­கும் அனைத்து சேவை­க­ளை­யும் பெறு­வ­தற்கு அந்த அட்டை மக்­க­ளுக்­கும் அர­சுக்­கும் இடை­யே­யான இணைப்­புப் பால­மாக இருக்­கும்.

தமிழக அரசின் அனைத்து துறைகளையும் ஒருங்கிணைத்து தரவுகளைச் சேகரிக்கும் பணி விரைவில் முடிவடையும் என மின் ஆளுமை முகமை தெரிவித்துள்ளது.

புதிய தரவு தளத்தை உரு­வாக்­கும் பணிக்­கான ஒப்­பந்­தப்­புள்­ளியை தமி­ழக அரசு கோரி­யுள்­ளது. மிக விரை­வில் தரவு தளத்தை அமைப்­ப­தற்­காக அடுத்­த­கட்ட பணி­கள் வேக­மெ­டுக்­கும் என எதிர்­பார்க்­கப்­ப­டு­கிறது.