அதிமுக கொடி, பெயர்: பழனிசாமிக்கு ஓபிஎஸ் பதிலடி

அதிமுக கொடி, பெயர்: பழனிசாமிக்கு ஓபிஎஸ் பதிலடி

2 mins read

சென்னை: கட்சி அலு­வ­லக சாவி ஒரு­வ­ரி­டம் இருப்­ப­தால் மட்­டுமே கட்சிக்குச் சொந்­தம் கொண்டாட முடி­யாது என எடப்­பாடி பழனிசாமிக்குப் பதி­லடி கொடுத்­துள்­ளார் ஓ.பன்­னீர்­செல்­வம்.

அதி­மு­க­வில் உள்­கட்­சிப் பூசல் நாளுக்கு நாள் வலுத்து வரு­கிறது.

கட்­சி­யின் பொதுச்­செ­ய­லாளர் பத­வியைப் பிடிப்­ப­தில் ஓபி­எஸ், இபிஎஸ் தரப்­பி­டையே கடும் போட்டி நில­வு­வ­து­டன், இரு­வ­ரும் தனித்­தனி­யாக நிர்­வா­கி­களை நீக்­கு­வதும் நிய­மிப்­ப­து­மாக அறி­விப்­பு­களை வெளி­யி­டு­கின்­ற­னர்.

அதி­முக பொதுக்­கு­ழுக் குழுவை கூட்­டு­வது தொடர்­பான வழக்­கும் உச்­ச ­நீ­தி­மன்­றத்­தில் நிலு­வை­யில் இருந்து வரு­கிறது.

ஒற்­றைத் தலைமை விவ­கா­ரம்­தான் உள்கட்­சிப்­பூ­சல் பெரி­தாக வெடிக்க முக்­கிய கார­ண­மாக உள்­ளது.

ஒருங்­கி­ணைப்­பா­ளர் பத­வி­யில் இருந்து பொதுக்­கு­ழு­வால் தன்னை பதவி நீக்­கம் செய்ய முடி­யாது என எடப்­பாடி பழ­னி­சாமி அனுப்பிய வழக்­க­றி­ஞர் நோட்­டீ­சுக்கு ஓ.பன்னீர்­செல்­வம் காட்­ட­மாகப் பதி­ல­ளித்­துள்­ளார்.

அதி­முக கட்சிக் கொடி, பெயர், ஒருங்­கி­ணைப்­பா­ளர் பதவி ஆகி­ய­வற்­றைப் ஓ.பன்­னீர்­செல்­வம் பயன்­படுத்­தி­யது தவறு என்று குற்­றம்­சாட்டி உள்ள பழ­னி­சாமி தரப்பு, இது­கு­றித்து விளக்­கம் கேட்டு கடந்த டிசம்­பர் 22ஆம் தேதி பன்­னீர்­செல்­வத்­துக்கு நோட்­டீஸ் அனுப்­பி­யது.

இதற்கு தமது வழக்­க­றி­ஞர் மூலம் பதில் அளித்­துள்­ளார் பன்னீர் ­செல்­வம். அதில், ஒருங்­கி­ணைப்­பா­ளர் பதவி­யில் இருந்து பொதுக்­கு­ழு­வால் தம்மை பதவி நீக்­கம் செய்ய முடி­யாது என்­றும் அதி­மு­க­வின் அடிப்­படை உறுப்­பி­னர்­க­ளால் மட்டுமே அது முடி­யும் என்­றும் பன்­னீர்­செல்­வம் சுட்­டிக்­காட்டி உள்­ளார்.

"ஏற்­கெ­னவே உச்­ச­ நீ­தி­மன்­றத்­தில் வழக்கு நிலு­வை­யில் இருக்­கும்­போது இது­போன்று தேவை­யற்ற குற்­றச்­சாட்­டு­களை எடப்­பாடி பழனி­சாமி தொடர்ந்து கூறி வந்­தால் அவ­தூறு வழக்கு தொடர்­வேன்.

"அதி­முக தொடங்­கப்­பட்ட நோக்­கத்­திற்கு எ­தி­ராக பழ­னி­சாமி செயல்­ப­டு­கி­றார். அதி­மு­க­வின் கட்­சிக் கொடி­யை­யும் பெய­ரை­யும் பயன்­ப­டுத்­து­வது தவறு இல்லை. அதை யாரா­லும் தடுக்க முடி­யாது," என்று ஓ.பன்­னீர்­செல்­வம் திட்­ட­வட்­ட­மா­கத் தெரி­வித்­துள்­ளார்.

இதற்­கி­டையே, அதி­முக மாவட்­டச் செய­லா­ளர்­கள் கூட்­டம் பழ­னி­சாமி தலை­மை­யில் நேற்று நடை­பெற்­றது. அதில் பன்­னீர்­செல்­வத்­துக்கு எதி­ராக சட்ட ரீதி­யில் நட­வ­டிக்­கை­களை மேற்­கொள்­வது என முடிவு செய்­யப்­பட்­டுள்­ளது.