ராகுல் காந்தி, கமல்ஹாசன் டெல்லியில் திடீர் சந்திப்பு

ராகுல் காந்தி, கமல்ஹாசன் டெல்லியில் திடீர் சந்திப்பு

1 mins read

புது­டெல்லி: காங்­கி­ரஸ் முன்­னாள் தலை­வர் ராகுல் காந்­தியை, மக்­கள் நீதி மய்­யம் கட்­சித் தலை­வர் கமல்­ஹா­சன் நேரில் சந்­தித்து ஆலோ­சனை மேற்­கொண்­டார்.

டெல்­லி­யில் உள்ள ராகுல் காந்­தி­யின் இல்­லத்­தில் நிகழ்ந்த இந்­தச் சந்­திப்பு சுமார் ஒரு மணி நேரம் நீடித்­த­தாக ஊட­கச் செய்தி தெரி­விக்­கிறது.

ஏற்­கெ­னவே ராகுல் காந்­தி­யின் ஒற்­றுமை நடைப்­ப­ய­ணத்­தில் பங்­கேற்­றார் கமல். அப்­போது இரு­வ­ரும் பேசிக்­கொண்டே நடந்­த­னர்.

இதை­ய­டுத்து, அடுத்த நாடாளு­மன்­றத்­ தேர்­த­லில் அவர் காங்­கி­ரஸ் தலை­மை­யி­லான கூட்­ட­ணி­யில் இடம்­பெற விரும்­பு­வ­தா­கக் கூறப்­ப­டு­கிறது.

இந்­நி­லை­யில், ராகுல், கமல் சந்­திப்பு குறித்து மக்­கள் நீதி மய்­யம் கட்­சி­யின் அதி­கா­ர­பூர்வ டுவிட்­டர் பக்­கத்­தில் பதி­வி­டப்­பட்­டுள்­ளது. அதில், 'மக்­கள் நல­னுக்­கா­க­வும் நாட்­டின் ஒற்­று­மைக்­கா­க­வும் சக இந்­தி­ய­னாக நடைப் பய­ணத்­தில் பங்­கேற்­ற­மைக்­காக மநீம தலை­வ­ருக்கு ராகுல் காந்தி நன்றி தெரி­வித்­தார்' எனக் குறிப்­பி­டப்­பட்­டுள்­ளது.

"இரு­வ­ருக்­கும் இடை­யே­யான உரை­யா­ட­லின்­போது இந்­திய அர­சி­யல் சாச­னத்­துக்கு ஏற்­பட்­டுள்ள ஆபத்து குறித்து பேசப்­பட்­டது.

"மேலும், மக்­க­ளி­டையே பிள­வை­யும் வெறுப்­பை­யும் பரப்­பும் மத­வாத அர­சி­ய­லுக்கு மாற்­றாக, ஒற்­றுமை, அன்பை விதைக்­கும் காந்­திய அர­சி­ய­லின் அவ­சி­யம் குறித்­தான தங்­க­ளது கருத்­து­களை இரு­வ­ரும் பரி­மா­றிக் கொண்­ட­னர்.

"மேலும் விவ­சா­யி­கள், தொழி­லா­ளர்­கள் என அனைத்­துத் தரப்பு மக்­க­ளின் நல­னை­யும் உள்­ளடக்கிய பொரு­ளா­தார வளர்ச்சி, இளை­ஞர்­க­ளின் நல­னைப் பாதுகாத்­தல், கிராம சுயாட்சி, மொழித் திணிப்பு உள்­ளிட்ட பல்­வேறு விஷ­யங்­கள் குறித்­தும் விவா­தித்­த­னர்," என மக்­கள் நீதி மய்­யம் மேலும் தெரி­வித்­துள்­ளது.