மேகக்கூட்டம் கடல்நீரை உறிஞ்சிய அதிசயம்

மேகக்கூட்டம் கடல்நீரை உறிஞ்சிய அதிசயம்

1 mins read

விழுப்­புரம்: நடுக்­க­ட­லில் திடீ­ரென உரு­வான ராட்­சத மேகக்­கூட்­டம் கடல் நீரை உறிஞ்­சி­ய­தைக் கண்டு அங்கு மீன்­பி­டித்­துக் கொண்­டி­ருந்த தமி­ழக மீன­வர்­கள் அதிர்ச்­சி­யும் வியப்­பும் அடைந்­த­னர்.

நேற்று முன்­தி­னம் மரக்­கா­ணம் பகு­தி­யைச் சேர்ந்த ஏரா­ள­மான மீன­வர்­கள் கட­லுக்கு மீன்­பி­டிக்­கச் சென்­றி­ருந்­த­னர்.

கரை­யில் இருந்து சுமார் ஐந்து கிலோ மீட்­டர் தூரத்­தில் அவர்­கள் மீன்­பி­டித்­த­போது, திடீ­ரென்று திரண்ட மேகக்­கூட்­டம் கடல்­நீ­ரைத் தொடும் அள­வுக்கு தாழ்­வாக இறங்­கி­யது.

இதை­ய­டுத்து அந்த மேகக்­கூட்­டம் கடல்­நீரை சுழல்­போல் மேலி­ழுத்­தது. மேகக்­கூட்­டம் நீரை உறிஞ்­சும் இந்த நிகழ்வை 'நீர்த்­தாரை' எனக் குறிப்­பி­டு­வர்.

சுமார் அரை­மணி நேரம் இந்த அதி­சய நிகழ்வு நீடித்­தது. மீன­வர்­கள் இக்­காட்­சியை கைப்­பே­சி­யில் படம் பிடித்­த­னர்.

பொது­வாக பரு­வ­நிலை மாற்­றம் ஏற்­ப­டும்­போது இது­போன்று நிக­ழும் என்­றும் ஐரோப்­பா­வில் இந்த நிகழ்வு பர­வ­லாக நிக­ழும் என்­றும் நிபு­ணர்­கள் கூறு­கின்­ற­னர்.

"இந்த நிகழ்­வுக்கு ஆங்­கி­லத்­தில் 'டோர்­னடோ' என்று பெயர். ஐரோப்பாவில் உள்ள பல்­வேறு நாடு­களில் அவ்­வப்­போது நிக­ழும். மரக்­கா­ணம் பகு­தி­யில் இவ்­வாறு நிகழ்ந்­துள்­ளது இதுவே முதன்­முறை எனக்­கூ­றப்­ப­டு­கிறது," என்று துறை­முக அதி­கா­ரி­கள் தெரி­வித்­த­னர்.

மீனவர்கள் பதிவு செய்த காணொளி சமூக ஊடகங்களில் பரவலாகப் பகிரப்பட்டு வருகிறது.