தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

பொங்கல் பரிசுடன் கரும்பு வழங்க உத்தரவு; பட்டாசு வெடித்துக் கொண்டாடிய விவசாயிகள்

1 mins read
40ba544b-b70a-45fa-a26f-383086ae9deb
-

சேலம்: பொங்­கல் பரி­சுத் தொகுப்­பு­டன் முழுக் கரும்பு ஒன்றை வழங்­கு­வ­தற்கு முதல்­வர் மு.க.ஸ்டா­லின் உத்­த­ர­விட்டுள்ளார்.

இதனை வர­வேற்­றுள்ள சேலம், நாகப்பட்டினம் மாவட்ட விவ­சா­யி­கள் பட்­டா­சு­கள் வெடித்து, இனிப்­பு­கள் வழங்­கிக் கொண்­டாடினர்.

பொங்­கல் தொகுப்­பு­டன் வழங்­கு­த­வற்­கான செங்­க­ரும்பை கூட்­டு ­ற­வுச் சங்­கங்­கள் மூலம் கொள்­முதல் செய்­து வழங்கவேண்­டும் என கரும்பு விவ­சா­யி­கள் கோரிக்கை விடுத்­துள்­ள­னர்.

இவ்வாண்டு பொங்­கல் பண்­டி­கைக்கு இரண்டு கோடியே 19 லட்­சம் அட்­டை­தா­ரர்­க­ளுக்கு, ஒரு கிலோ பச்­ச­ரிசி, ஒரு கிலோ சர்க்­கரை, 1,000 ரூபாய் ரொக்­கம் வழங் கப்­படும் என தமி­ழக அரசு அறி­வித்­தி­ருந்­தது.

இந்­நி­லை­யில், இந்த தொகுப்பு டன் கரும்­பை­யும் சேர்க்கவேண்­டும் என்ற கோரிக்கை எழுந்­தது.

இதை­ய­டுத்து, அமைச்­சர்­கள் பெரி­ய­க­ருப்­பன், சக்­க­ர­பாணி ஆகி யோரு­டன் ஆலோ­சனை நடத்­திய முதல்­வர் ஸ்டா­லின், பொங்­கல் பரி­சுத் தொகுப்­பு­டன் முழுக் கரும்பு ஒன்­றை­யும் சேர்த்து வழங்க உத்­த­ர­விட்­டார்.

கும்­ப­கோ­ணம், குமா­ரப்­பா­ளை­யம் விவ­சா­யி­கள் இதனைப் பாராட்டி உள்­ள­னர்.

தமி­ழக அர­சின் கரு­ம்பு கொள்முத­லுக்கு நன்றி தெரி­வித்­துள்ள பல்­ல­டம் பகுதி விவ­சா­யி­கள், அடுத்த ஆண்டு முதல் இரண்டு கரும்­பு­களை வழங்கி விவ­சாயிகளின் வாழ்­வா­தா­ரத்­தைப் பாது­காக்­க­வேண்­டும் என வலி­யு­றுத்தி உள்­ள­னர்.

இந்த அறி­விப்­புக்கு சட்­ட­மன்ற காங்­கி­ரஸ் கட்­சி­யின் தலை­வர் கு. செல்வபெருந்­தகை, பாமக நிறு­வ­னர் ராம­தாஸ், கம்­யூ­னிஸ்டு கட்­சி­கள், அதிமுக உள்ளிட்ட கட்சிகளும் பாராட்டி உள்­ள­ன.