உண்ணாவிரதப் போராட்டம்: 40 ஆசிரியர்கள் மயக்கம்

உண்ணாவிரதப் போராட்டம்: 40 ஆசிரியர்கள் மயக்கம்

1 mins read
70ac18dc-6ece-4f09-8845-62e4029d686d
-

சென்னை: சென்­னை­யில் சம்­ப­ளம் வழங்­கு­வ­தில் அனை­வ­ரை­யும் ஒரே மாதி­ரி­யாக நடத்­த­வேண்­டும் என் பதை வலி­யு­றுத்தி, 2,000க்கும் மேற்­பட்ட ஆசி­ரி­யர்­கள் தொடர்ந்து மூன்­றா­வது நாளாக போராட்­டம் நடத்தி வரு­கின்­ற­னர்.

தமி­ழ­கத்­தில் கடந்த 2009ஆம் ஆண்டு ஜூன் மாதம் வரை நிய­மனம் செய்­யப்­பட்ட இடை­நிலை ஆசி­ரி­யர்­க­ளுக்­கும் அதன்பிறகு நிய­மிக்­கப்­பட்ட இடை­நிலை ஆசிரி யர்­க­ளுக்­கும் இடையே ஊதிய முரண்­பாடு இருந்து வரு­கிறது.

இந்த முரண்­பாட்டை சரி­செய்து, சம வேலைக்கு சம ஊதி­யம் வழங்­கக் கோரி சென்னை நுங்­கம்பாக்­கத்­தில் உள்ள பேரா­சி­ரி­யர் அன்­ப­ழ­கன் கல்வி வளா­கத்­தில் 2,000க்கும் மேற்­பட்ட இடை­நிலை ஆசி­ரி­யர்­கள் குடும்­பத்­து­டன் கடந்த 27ஆம் தேதி­மு­தல் தொடர் உண்ணாவி­ர­தப் போராட்­டத்­தில் ஈடு­பட்டு வரு­கின்­ற­னர்.

இந்­தப் போராட்­டம் நேற்­றும் தொடர்ந்­ததை அடுத்து 40க்கும் மேற்­பட்ட ஆசி­ரி­யர்­கள் மயக்­கம் அடைந்து கீழ்ப்­பாக்­கம், ராயப்­பேட்டை அரசு மருத்­து­வ­ம­னை­களில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வரு­கின்­றனா்.