அரசியல் செய்யாமல் ராகுலுக்கு பாதுகாப்பு வழங்க வலியுறுத்து

அரசியல் செய்யாமல் ராகுலுக்கு பாதுகாப்பு வழங்க வலியுறுத்து

2 mins read

புது­டெல்லி: அமை­தி­, நல்­லி­ணக்­கத்­தை­ வலி­யு­றுத்தி ராகுல் காந்தி மேற்­கொள்­ளும் இந்­திய ஒற்­று­மை பயணத்தில் அர­சி­யல் செய்­வதை விடுத்து அவருக்கான முழு­மை­யான பாது­காப்பை வழங்­க­வேண்­டும் என்று மத்­திய அர­சுக்கு காங்­கி­ரஸ் கடி­தம் எழு­தி­யுள்­ளது.

அக்­கட்­சி­யின் முன்­னாள் தலை வரும் எம்­பி­யு­மான ராகுல் காந்தி, செப்­டம்­பர் மாதம் கன்­னியாகும­ரி­யில் தொடங்­கிய நடைப்பய­ணம், பல்­வேறு மாநி­லங்­க­ளைக் கடந்து டெல்­லி­யைக் கடந்த வாரம் சென்­ற­டைந்­தது.

டெல்லி, ஹரி­யானா எல்­லைப் பகு­தி­யான குர்­கா­னில் யாத்­தி­ரை­சென்­ற­வர்­கள் முகா­மிட்­டி­ருந்த போது, அவர்­க­ளின் கன்­டெய்னர் வாகன அறை­களில் சந்­தேகப் பேர்வழிகள் சில­ரது நட­மாட்­டம் இருப்பது கண்டுபிடிக்­கப்­பட்­டது.

அவர்­கள் கர்­நா­ட­காவை ஆளும் பாஜக கூட்­டணி அர­சின் உள­வுப் பிரிவு காவ­லர்­கள் என்­பது தெரிய வந்­த­தால் காங்­கி­ரஸ் சார்­பில் புகார் கொடுக்­கப்­பட்­டது.

அதே­போல், டெல்­லி­யில் யாத்­திரை சென்­ற­போ­தும் பல பகு­தி­களில் ராகுல் காந்தி கூட்ட நெரி­ச­லில் சிக்க நேர்ந்­தது.

இந்­நி­லை­யில், அவ­ரது பாது காப்பை உறு­திப்­ப­டுத்த உரிய நட­வடிக்­கை­களை எடுக்­க­வேண்­டும் என மத்­திய உள்­துறை அமைச்­சர் அமித் ஷாவுக்கு காங்­கி­ரஸ் பொதுச் செய­லா­ளர் கே.சி. வேணு­கோ­பால் கடி­தம் எழு­தி­யுள்­ளார்.

அதில், ராகு­லுக்கு அதி­முக்­கிய பிர­மு­கர்­க­ளுக்­கான 'இசட்' பிரிவு பாது­காப்பு வழங்­கப்­பட்­டி­ருந்த போதி­லும், கூட்ட நெரி­ச­லை ஒழுங்­கு­படுத்­தவோ, பாது­காப்பு அம்­சங்­க­ளைக் கடைப்­பி­டிக்­கவோ டெல்லி காவ­லர்­கள் அக்­கறை காட்டவில்லை என விமர்­சித்­துள்­ளார்.

ஹரி­யானா மாநில உள­வுப் பிரி­வைச் சேர்ந்த சிலர், நடைப்­ப­ய­ணம் சென்­ற­வர்­க­ளின் கன்­டெய்­னர் வாக­னங்­களில் திருட்­டுத்­த­ன­மாக நுழைந்­ததை சுட்­டிக்­காட்டி உள்ள வேணு­கோ­பால், ஒற்­றுமை யாத்­தி­ரை­யில் அர­சி­யல் செய்­வதை விடுத்து ராகு­லுக்குப் பாது­காப்பை உறு­திப்­படுத்த மத்­திய அரசு நட­வ­டிக்கை எடுக்கவேண்­டும் எனக் கேட்டுக்கொண்டுள்ளார்.

ஏற்­கெ­னவே இந்­திரா காந்தி, ராஜீவ் காந்தி ஆகிய இரண்டு பிர­த­மர்­க­ளின் இன்­னு­யிரை நாட்­டின் ஒற்­று­மைக்­கும் ஒரு­மைப்பாட்­டுக்­கும் தியா­கம் செய்­துள்­ளதை நினைவுகூர்ந்­துள்ள வேணு கோபால், ஜன­வரி 3ஆம் தேதி மீண்­டும் தொடங்­கும் ராகு­லின் யாத்­திரைக்கு உரிய பாது­காப்பை வழங்­க­வேண்­டும் என்றார்.

பாதுகாப்பில் குறைபாடு இல்லை

இதனிடையே, ராகுல் காந்திக்கு வழங்கப்பட்ட பாதுகாப்பில் எந்தக் குறைபாடும் இல்லை என்று துணை ராணுவப்படை விளக்கம் அளித்து உள்ளது. பல சந்தர்ப்பங்களில் பாதுகாப்பு நெறிமுறைகளை ராகுல் காந்தி மீறியதாகவும் இது தொடர்பாக அவ்வப்போது அவரது தரப்பினரிடம் தெரிவிக்கப்பட்டு இருப்பதாகவும் கூறப்பட்டுள்ளது.