பணம், பொருள்கள் மக்களிடம் சேர ஆட்சியர்களே பொறுப்பு

பணம், பொருள்கள் மக்களிடம் சேர ஆட்சியர்களே பொறுப்பு

2 mins read

சென்னை: பொங்­கல் பரி­சுத் தொகுப்பு, ரொக்­கப்­ப­ணம் ஆகி­யன எந்த ஒரு குழப்­ப­மும் இன்றி மக்­க­ளி­டம் விநி­யோ­கிக்­கப்­பட வேண்­டும். இதற்கு அந்­தந்த மாவட்ட ஆட்­சி­யர்­களும் பொறுப்­பேற்­றுக் கொள்­ள­வேண்­டும் என தமி­ழக அரசு உத்­த­ர­விட்டு உள்­ளது.

எக்­கா­ர­ணம் கொண்­டும் தகுதி யான பய­னா­ளி­க­ளுக்கு தொகுப்பை தரா­மல் திருப்பியனுப்­பக்­ கூடாது எனவும்­ அரசு கூறியுள்­ளது.

இது­கு­றித்து மாநில அரசு வெளி­யிட்­டுள்ள சுற்­ற­றிக்­கை­யில், பொங்­கல் தொகுப்பு முறை­யாக விநி­யோ­கிக்­கப்­ப­டு­கி­றதா என ஆட்­சி­யர்­கள் கண்­கா­ணிக்க வேண்­டும்.

அத்­து­டன், தொகுப்­பு­டன் வழங்­கப்­படும் பச்­ச­ரிசி, செங்­க­ரும்பு ஆகி­யன தரத்­து­டன் இருப்­ப­தை­யும் மாவட்ட ஆட்­சி­யர்­கள் உறுதி செய்து­கொள்ள வேண்­டும் என­வும் குறிப்பிடப்பட்டுள்ளது.

வரும் ஜன­வரி 9 முதல் அனைத்து நியாயவிலைக் கடை­களி­லும் பொங்­கல் தொகுப்பு, ரொக்­கப்­ப­ணம் வழங்­கும் பணியைத் தொடங்கவேண்­டும். இதற்கு ஏது­வாக குடும்ப அட்டைதாரர்­க­ளுக்கு ஜன­வரி 3 முதல் 8ஆம் தேதி வரை டோக்­கன் வழங்­க­வேண்­டும். பொங்­கல் பரிசு விநி­யோ­கத்­துக்­காக ஜன­வரி 13ஆம் தேதி நியாயவிலைக் கடை­கள் செயல்­படும் என்று அரசு அறி­வித்துள்­ளது.

வரும் ஜன­வரி மாதம் 15ஆம் தேதி பொங்­கல் திரு­நாள் கொண்டா டப்­ப­ட­வுள்ள நிலை­யில், அனைத்து மக்­களும் இத்திருநாளைச் சிறப் பாகக் கொண்­டாடும் வகையில் குடும்ப அட்­டை­தா­ரா்­க­ளுக்கு ரூ.1,000 ரொக்­கப் பணத்­து­டன் பச்­ச­ரிசி, சா்க்கரையும் வழங்­கப்­படும் என அரசு அறி­வித்திருந்தது.

ஆனால், இந்­தப் பொங்­கல் பரி­சுத் தொகுப்­பில் கரும்பு இடம்­பெ­றா­தது குறித்து பல தரப்­பி­ன­ரும் எதிா்ப்பு தெரி­வித்­த­னர்.

இத­னைத்தொடர்ந்து பொங்­கல் பரி­சுத் தொகுப்­பு­டன் செங்­க­ரும்­பும் வழங்­கப்­படும் என அரசு நேற்று முன்தினம் அறி­வித்தது.

ஆர். காந்தி: வழக்கம்போல் வேட்டி-சேலைகள்

பொங்கலுக்கு வேட்டி சேலைகள் வழக்கம்போல வழங்கப்படும் என கைத்தறி, துணிநூல் துறை அமைச்சர் ஆர்.காந்தி அறிவித்துள்ளார்.

பொங்கலுக்கு இலவச வேட்டி சேலைகள் நெய்வதற்கு தரமற்ற நூல்களை அரசு வழங்கியுள்ளதாகவும் வேட்டி சேலை வழங்காவிட்டால் போராட்டம் நடத்துவோம் என்றும் அண்மையில் முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்திருந்தார்.

இந்நிலையில், கடந்த நவம்பர் மாதம் 19ஆம் தேதியன்று ஒரு கோடியே 79 லட்சம் குடும்ப அட்டைதாரர்களுக்கு இலவச வேட்டி சேலைகள் வழங்கப்படும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். இனிமேலாவது பத்திரிகைகளைப் பழனிசாமி படிக்கவேண்டும் என அமைச்சர் ஆர். காந்தி கூறியுள்ளார்.