அருவி நீரில் அடித்துச் செல்லப்பட்ட குழந்தை; துணிந்து காப்பாற்றிய இளையர்

அருவி நீரில் அடித்துச் செல்லப்பட்ட குழந்தை; துணிந்து காப்பாற்றிய இளையர்

1 mins read
a5b95a1c-645a-4b22-bccf-8c31199dd610
-

சென்னை: தென்­காசி அருகே பழைய குற்­றால அரு­வி­யில் அடித்­துச் செல்­லப்­பட்ட நான்கு வயது குழந்­தை­யைப் பத்­தி­ர­மாக மீட்ட இளை­ஞ­ருக்குப் பாராட்­டு­கள் குவிந்து வரு­கின்­றன.

தண்­ணீர் ஆர்ப்­ப­ரித்­துக் கொட்­டும் பழைய குற்­றால அரு­வி­யில் நூற்­றுக்­க­ணக்­கா­னோர் நேற்று முன்­தி­னம் குளித்­துக்கொண்­டி­ருந்­த­னர். கேரள மாநி­லம், பாலக்­காட்டைச் சேர்ந்த நவ­நீதகிருஷ்­ணன் என்ப வரும் தனது குடும்­பத்­தி­ன­ரு­டன் அரு­வி­யில் குளித்­துக்­கொண்­டி­ருந்­தார். அப்­போது அங்கு நின்­று­கொண்­டி­ருந்த அவ­ரது நான்கு வயது பெண் குழந்தை தமி­ழினி, அருவி நீரில் அடித்­துச் செல்­லப்­பட்­டது. இதைப் பார்த்த சிலர் சத்­தம் போட்­டதை அடுத்து, விஜ­ய­கு­மார் என்ற இளை­ஞர் அரு­வி­யில் துணிச்­ச­லு­டன் இறங்கி குழந்தை யைப் பத்­தி­ர­மாக மீட்­டார். சாதுர்­ய­மாகச் செயல்­பட்டு குழந்­தை­யைக் காப்­பாற்­றிய இளை­ய­ருக்கு அங்கு இருந்­த­வர்­கள் நன்­றி­யும் பாராட்­டும் தெரி­வித்­த­னர்.

தாயுடன் சிறுமி தமிழினி. குழந்தையைக் காப்பாற்றிய இளைஞர் விஜயகுமார்.

படங்கள்: ஊடகம்